நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடாமல் வெளுக்கும் மழை

Nov 30, 2024,08:59 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் என பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை கொட்டிக் கொண்டுள்ளது.


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அது புதுச்சேரிக்கு 150 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 140 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. 




இதன் எதிரொலியாக கடலோரத் தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டி வருகிறது. இரவிலிருந்து விட்டு விட்டு பெய்து வந்த மழை தற்போது அடை மழையாக மாறி கொட்டித் தீர்க்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருகிறது.


தற்போது மேகக் கூட்டங்கள் சென்னை கடற்கரைக்கு மேலாக அதிக அளவில் வியாபித்து வருவதால் மழை போகப் போக மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. மழை, புயலை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியில் போக வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. புதுச்சேரியில் தற்போது பேய்க்காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

news

திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

news

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!

news

Chennai metro: சென்னையில் விரைவில்... பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்!

news

வைட்டமின் சி ரொம்ப ரொம்ப முக்கியம்.. எதற்காக தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?

news

மும்பையில் வீடு வாங்கணுமா?.. அப்டின்னா நீங்க இன்னும் 100 வருடங்கள் சேமிக்கணும்!

news

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!

news

சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? டாக்டர் அன்புமணி கேள்வி!

news

போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்