சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் என பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை கொட்டிக் கொண்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அது புதுச்சேரிக்கு 150 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 140 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இதன் எதிரொலியாக கடலோரத் தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டி வருகிறது. இரவிலிருந்து விட்டு விட்டு பெய்து வந்த மழை தற்போது அடை மழையாக மாறி கொட்டித் தீர்க்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருகிறது.
தற்போது மேகக் கூட்டங்கள் சென்னை கடற்கரைக்கு மேலாக அதிக அளவில் வியாபித்து வருவதால் மழை போகப் போக மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. மழை, புயலை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியில் போக வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. புதுச்சேரியில் தற்போது பேய்க்காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்
உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}