சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் என பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை கொட்டிக் கொண்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அது புதுச்சேரிக்கு 150 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 140 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இதன் எதிரொலியாக கடலோரத் தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டி வருகிறது. இரவிலிருந்து விட்டு விட்டு பெய்து வந்த மழை தற்போது அடை மழையாக மாறி கொட்டித் தீர்க்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருகிறது.
தற்போது மேகக் கூட்டங்கள் சென்னை கடற்கரைக்கு மேலாக அதிக அளவில் வியாபித்து வருவதால் மழை போகப் போக மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. மழை, புயலை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியில் போக வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. புதுச்சேரியில் தற்போது பேய்க்காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா
வரமும்.. வரம்பும்!
{{comments.comment}}