நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடாமல் வெளுக்கும் மழை

Nov 30, 2024,08:59 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் என பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை கொட்டிக் கொண்டுள்ளது.


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அது புதுச்சேரிக்கு 150 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 140 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. 




இதன் எதிரொலியாக கடலோரத் தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டி வருகிறது. இரவிலிருந்து விட்டு விட்டு பெய்து வந்த மழை தற்போது அடை மழையாக மாறி கொட்டித் தீர்க்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருகிறது.


தற்போது மேகக் கூட்டங்கள் சென்னை கடற்கரைக்கு மேலாக அதிக அளவில் வியாபித்து வருவதால் மழை போகப் போக மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. மழை, புயலை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியில் போக வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. புதுச்சேரியில் தற்போது பேய்க்காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்