சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில், புயல் மழை காரணமாக 300 டன் பூக்கள் வீணாகி விட்டன. அவற்றை வியாபாரிகள் கீழே கொட்டினர். இதனால் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மிச்சாங் புயல் யாரையும் விட்டு வைக்க வில்லை. எல்லோருக்கும் ஓவ்வொரு விதத்தில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து விட்டு போயுள்ளது. அப்படி என்ன தான் புயலுக்கு சென்னை மக்கள் மீது கோபமோ தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் மழை என்னவோ 2 நாட்கள் தான். அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்றால் அது தோண்ட தோண்ட வந்து கொண்டே தான் உள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கும் ஒரு காட்டு காட்டி விட்டு போயுள்ளது மிச்சாங் புயல். சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் தான் என்றாலும், பாதிக்கப்பட்ட விதங்களும் அதிகம் எனலாம்.

புயல் கோயம்பேடு பூ மார்கெட்டையும் விட்டு வைக்க வில்லை. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் வரும். ஆசியாவிலேயே மிகப்பெரிய பூ மார்கெட் என்றால் அது சென்னை கோயம்பேடு பூ மார்கெட் தான். பல மாட்டங்களில் இருந்து டன் கணக்கில் வரும் பூக்கள் அனைத்தும் ஒரே நாளில் விற்று தீர்ந்து விடும். அப்படிபட்ட பூ மார்க்கெட்டில் மிச்சாங் புயல் காரணமாக விற்பனையாகாமல், டன் கணக்கில் பூக்கள் அழுகிப் போய் விட்டன அதுவும் ஒரு டன், 2 டன் இல்லை கிட்டத்தட்ட 300 டன் பூக்கள் அழுகியுள்ளன.
பூக்களும் அழுகி பூ வியாபாரிகளையும் அழ வைத்து விட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட் முழுவதும் பூக்களின் அழுகல் வாடை தான் அதிகமாக உள்ளது. மிச்சாங் புயலினால் மலர் மனம் வீசும் கோயம்பேடு பூ மார்க்கெட் தற்பொழுது துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அழுகிய மலர்களை கொட்ட கூட இடம் இன்றி வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் இந்த மார்கெட்டிற்கு கடந்த ஒரு வாரகாலமாக யாரும் வராமல் பூக்கள் அனைத்து அழுகிய நிலையில் கீழே கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் மொத்த வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
JCD Prabhakar: சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஜேசிடி பிரபாகர்.. எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்!
கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!
CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
{{comments.comment}}