பூவையும் விட்டு வைக்காத புயல்..  300 டன் பூக்கள் வீண்..  பூ வியாபாரிகளுக்கு ரூ. 2 கோடி நஷ்டம்

Dec 07, 2023,06:13 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில், புயல் மழை காரணமாக  300 டன் பூக்கள் வீணாகி விட்டன. அவற்றை வியாபாரிகள் கீழே கொட்டினர். இதனால் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


மிச்சாங் புயல் யாரையும் விட்டு வைக்க வில்லை. எல்லோருக்கும் ஓவ்வொரு விதத்தில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து விட்டு போயுள்ளது. அப்படி என்ன தான் புயலுக்கு சென்னை மக்கள் மீது கோபமோ தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 


புயல் மழை என்னவோ 2 நாட்கள் தான். அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்றால் அது தோண்ட தோண்ட வந்து கொண்டே தான் உள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கும் ஒரு காட்டு காட்டி விட்டு போயுள்ளது மிச்சாங் புயல். சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம்  ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் தான் என்றாலும், பாதிக்கப்பட்ட விதங்களும் அதிகம் எனலாம்.




புயல் கோயம்பேடு பூ மார்கெட்டையும் விட்டு வைக்க வில்லை. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் வரும். ஆசியாவிலேயே மிகப்பெரிய பூ மார்கெட் என்றால் அது சென்னை கோயம்பேடு பூ மார்கெட் தான். பல மாட்டங்களில் இருந்து டன் கணக்கில் வரும் பூக்கள் அனைத்தும்  ஒரே நாளில் விற்று தீர்ந்து விடும். அப்படிபட்ட பூ மார்க்கெட்டில் மிச்சாங் புயல் காரணமாக விற்பனையாகாமல், டன் கணக்கில் பூக்கள் அழுகிப் போய் விட்டன அதுவும் ஒரு டன், 2 டன் இல்லை கிட்டத்தட்ட 300 டன் பூக்கள் அழுகியுள்ளன. 


பூக்களும்  அழுகி பூ  வியாபாரிகளையும் அழ வைத்து விட்டது. கோயம்பேடு பூ  மார்க்கெட் முழுவதும் பூக்களின் அழுகல் வாடை தான் அதிகமாக உள்ளது. மிச்சாங் புயலினால் மலர் மனம் வீசும் கோயம்பேடு பூ மார்க்கெட் தற்பொழுது துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அழுகிய மலர்களை கொட்ட கூட இடம் இன்றி வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனர். ஒரு  நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் இந்த மார்கெட்டிற்கு கடந்த ஒரு வாரகாலமாக யாரும் வராமல் பூக்கள் அனைத்து அழுகிய நிலையில் கீழே கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் மொத்த வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!

news

பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்

news

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்