சென்னை : சென்னைக்கு அருகே வங்கக் கடலில் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதியானது புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை மக்கள் உஷாராக இருக்கும் படி தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதி இன்று (டிசம்பர் 03) புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு மிச்சாங் (உச்சரிப்பில் மிக்ஜாம்) என மியான்மர் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த புயல் சென்னைக்கு மிக அருகே நெருங்கி வந்து ஆந்திராவின் கடலோர பகுதிகளை தொட்டுச் சென்று, கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களான கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அளித்துள்ள பேட்டியில், புயலின் பாதையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. புயல் சின்னமானது சென்னைக்கு மிக அருகில் உள்ளது. அடர்ந்த மேகங்கள் சூழ்திருக்கும். இதனால் நாள் முழுவதும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மிக மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இப்போதே மழை துவங்கி விட்டது. இது போன்ற எச்சரிக்கைகளை நான் வழங்குவது மிக அரிதான ஒன்று.
2015 ம் ஆண்டு நவம்பர் 15,16, டிசம்பர் 1,2, 2016 ம் ஆண்டு டிசம்பர் 11,12 பெய்த மழையை போல் இந்த ஆண்டு டிசம்பர் 3, 4 ஆகிய நாட்களில் மிக மிக கனமழை பெய்யும். அதிலும் டிசம்பர் 3 ம் தேதி இரவு முதல் 4 ம் தேதி இரவு வரை மிக முக்கியமான காலம் என்பதால் இந்த சமயத்தில் மிக அதிக மழையை எதிர்பார்க்கலாம். அதற்காக 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை போல் ஏற்படும் என அர்த்தம் கிடையாது. பொதுவாக புயல் என்றால் 100 மி.மீ., வரை மழை பெய்யும். ஆனால் தற்போது 200 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாரும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். டிசம்பர் 3 ம் தேதி இரவு முதல் 4 ம் தேதி இரவு வரை இடை விடாது அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்
உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}