- மஞ்சுளா தேவி
சென்னை: மிச்சாங் புயல் மழையால் பெரும்பாலான கார்கள், டூவீலர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை வீடியோவில் பார்த்திருப்போம்.. சரி இப்படிப்பட்ட வாகனங்கள் சேதமடைந்தால் அதை பழுது பார்க்க முடியுமா அல்லது இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ண முடியுமா.. நிச்சயம் முடியும்.
கடந்த 2015ம் ஆண்டு வெளுத்தெடுத்த மழையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதுபோல நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போதுதான் பெருமழைக்காலத்தில் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் குறித்த மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இப்போதும் அதுபோன்ற ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத புயல் மழை காரணமாக சென்னை முழுவதும் நீரால் சூழப்பட்டது . இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது பள்ளிக்கரணை.

இப்பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால் இரண்டு நாட்களாக பெய்த கனமழைக்கு தண்ணீர் இடுப்பளவு உயர்ந்தது. இதனை தவிர்த்து பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரி கரை உடைந்து மழை வெள்ளம் ஆர்ப்பரித்து மள மளவென வந்தது. இங்கு உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தண்ணீர் ஆக்கிரமித்தது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலைமை ஏற்பட்டது.
மேலும் பல்லாவரம் துரைப்பாக்கம் இடையே உள்ள இணைப்பு சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டது.
மழை நின்றும் இப்பகுதியில் தற்போது வரை தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.ஏரி உடைந்து தண்ணீர் வந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இப்பகுதி மக்களுடைய கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பல்வேறு கார்கள் தண்ணீருக்குள் மிதந்து நாசமாகின. பெரும்பாலான கார்கள் அடித்துச் செல்லப்பட்டதால் இதனை சரி செய்ய கார் உரிமையாளர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இக்கார்கள் கடந்த நான்கு நாட்களாக மழை நீரூக்குள் மூழ்கி இருப்பதால் இதனுடைய இஞ்சின்கள் முழுவதும் பழுதடைந்தது. இதனால் கார் உரிமையாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாகனம் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால் இதனை மீட்டு எப்படி இன்சூரன்ஸ் பெற முடியும் என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள காரை முதலில் மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும். அந்தக் காரை எதுவும் செய்யக் கூடாது. திறக்கக் கூடாது. என்ஜின் ஸ்டார்ட் செய்யக் கூடாது. எந்த நிலையில் அது உள்ளதோ அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கார் எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பின்னர் நாம் எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்துள்ளோமோ அந்த நிறுவனத்த அணுகினால், அவர்கள் அடுத்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். நமக்கு எந்த அளவுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதோ அது கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}