- மஞ்சுளா தேவி
சென்னை: மிச்சாங் புயல் மழையால் பெரும்பாலான கார்கள், டூவீலர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை வீடியோவில் பார்த்திருப்போம்.. சரி இப்படிப்பட்ட வாகனங்கள் சேதமடைந்தால் அதை பழுது பார்க்க முடியுமா அல்லது இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ண முடியுமா.. நிச்சயம் முடியும்.
கடந்த 2015ம் ஆண்டு வெளுத்தெடுத்த மழையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதுபோல நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போதுதான் பெருமழைக்காலத்தில் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் குறித்த மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இப்போதும் அதுபோன்ற ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத புயல் மழை காரணமாக சென்னை முழுவதும் நீரால் சூழப்பட்டது . இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது பள்ளிக்கரணை.

இப்பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால் இரண்டு நாட்களாக பெய்த கனமழைக்கு தண்ணீர் இடுப்பளவு உயர்ந்தது. இதனை தவிர்த்து பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரி கரை உடைந்து மழை வெள்ளம் ஆர்ப்பரித்து மள மளவென வந்தது. இங்கு உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தண்ணீர் ஆக்கிரமித்தது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலைமை ஏற்பட்டது.
மேலும் பல்லாவரம் துரைப்பாக்கம் இடையே உள்ள இணைப்பு சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டது.
மழை நின்றும் இப்பகுதியில் தற்போது வரை தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.ஏரி உடைந்து தண்ணீர் வந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இப்பகுதி மக்களுடைய கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பல்வேறு கார்கள் தண்ணீருக்குள் மிதந்து நாசமாகின. பெரும்பாலான கார்கள் அடித்துச் செல்லப்பட்டதால் இதனை சரி செய்ய கார் உரிமையாளர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இக்கார்கள் கடந்த நான்கு நாட்களாக மழை நீரூக்குள் மூழ்கி இருப்பதால் இதனுடைய இஞ்சின்கள் முழுவதும் பழுதடைந்தது. இதனால் கார் உரிமையாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாகனம் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால் இதனை மீட்டு எப்படி இன்சூரன்ஸ் பெற முடியும் என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள காரை முதலில் மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும். அந்தக் காரை எதுவும் செய்யக் கூடாது. திறக்கக் கூடாது. என்ஜின் ஸ்டார்ட் செய்யக் கூடாது. எந்த நிலையில் அது உள்ளதோ அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கார் எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பின்னர் நாம் எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்துள்ளோமோ அந்த நிறுவனத்த அணுகினால், அவர்கள் அடுத்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். நமக்கு எந்த அளவுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதோ அது கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}