சென்னை: ஏமன் நாட்டில் இன்று அதிகாலை கரையைக் கடந்தது தேஜ் புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்கனவே ஒரு வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறியது. இதற்கு தேஜ் என பெயரிடப்பட்டது. இது இந்தியா வைத்த பெயராகும். மேலும் இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.

தென்மேற்கு அரபிக் கடலில் உருவான தேஜ் புயல் ஏமன் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடலோர பகுதிக்கு நகர்த்துச் சென்றது. இந்தப் புயல் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் மழை தொடரும் எனவும், இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3:30க்குள் தேஜ் புயல் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் - விஜய் பேச்சு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; விஜய் பதிவு
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.7,600 குறைவு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்
டி20 உலகக் கோப்பை: இந்தியா உடனான போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்...ஐசிசி அதிரடி அறிக்கை
அன்பு மாணவர்களே!
நீ மழை! (காதல் தொடர்கதை.. அத்தியாயம் 1)
{{comments.comment}}