சென்னை: ஏமன் நாட்டில் இன்று அதிகாலை கரையைக் கடந்தது தேஜ் புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்கனவே ஒரு வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறியது. இதற்கு தேஜ் என பெயரிடப்பட்டது. இது இந்தியா வைத்த பெயராகும். மேலும் இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.

தென்மேற்கு அரபிக் கடலில் உருவான தேஜ் புயல் ஏமன் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடலோர பகுதிக்கு நகர்த்துச் சென்றது. இந்தப் புயல் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் மழை தொடரும் எனவும், இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3:30க்குள் தேஜ் புயல் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}