வங்க கடலில் வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

May 28, 2025,01:43 PM IST
சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதிகளில் நேற்று அதிக கன மழை பெய்தால் அப்பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்ய இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி, கோழிக்கோடு, வயநாடு, மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.




மேலும், தமிழ்நாடு கேரளாவில்  மே 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசைகளில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை தீவிரமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் காலை 10 மணிக்கு மழை பெய்யும் மாவட்டங்கள்: 

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்மழைக்கு வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராட்டங்கள் பல.. இறுதியில் அழகான வெற்றி.. After the Struggle, I Shine !

news

ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone

news

ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN

news

போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

news

அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?

news

அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!

news

ஒரே அரிசி, பலவகை கஞ்சி.. காய்ச்சல் இருந்தால் இதை சாப்பிட்டுப் பாருங்க!

news

டிசம்பர் 26 என்ன தினம் என்று நினைவில் வருகிறதா?

news

கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

அதிகம் பார்க்கும் செய்திகள்