வங்க கடலில் வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

May 28, 2025,01:43 PM IST
சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதிகளில் நேற்று அதிக கன மழை பெய்தால் அப்பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்ய இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி, கோழிக்கோடு, வயநாடு, மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.




மேலும், தமிழ்நாடு கேரளாவில்  மே 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசைகளில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை தீவிரமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் காலை 10 மணிக்கு மழை பெய்யும் மாவட்டங்கள்: 

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்மழைக்கு வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

news

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

news

ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்