- கி.தீபன்
வைகறைத்
துயில்
கலைந்து
வாசலில் போட்ட
கோலங்களும்..
கைவிரல்
கோர்த்த படி
கரும்புகள்
கடித்துச்
செல்லும்
குழந்தைகளும்..

துடைத்தும் மெழுகியும்
சுத்தத்தை அணிந்துகொண்ட
வீடுகளும்..
வெல்லமும் அரிசியும்
ஒன்றிணையக்
காத்திருந்த
பானைகளும்..
குலவையும் குதூகலமும்...
அளவில்லா
ஆனந்தமும்..
இவை அனைத்தும்
இனிமையைத் தவிர
வேறென்ன
தந்துவிடும்...
தை பிறந்துவிட்டால்
இனிமையோடு
எல்லாமே
வந்துவிடும்...
அனைவருக்கும்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...!
(கி்.தீபன் , ஆசிரியர், திருவாரூர்)
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}