ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!

Aug 09, 2025,02:45 PM IST

சென்னை : வழக்கமாக வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு ரயில்கள், பஸ்கள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர்  மாதம் 20 ம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் ஆகஸ்ட் 17ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.


ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற முறையை ரயில்வே நிர்வாகம் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதம் வரும் தீபாவளி பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்றால் அதற்கான முன்பதிவு ஆகஸ்ட் மாதம், அதாவது இந்த மாதம் துவங்க உள்ளது. 


சொந்த ஊர் செல்லும் மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதிகளை மறக்காமல் தெரிந்து கொண்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது சிறப்பு. ஆகஸ்ட் மாதம் எந்த தேதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது என்ற விபரத்தை தெரிந்து கொள்வோமா..


தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதி :




- ஆகஸ்ட் 17 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 16  முதல் முன்பதிவு தொடங்கும்

- ஆகஸ்ட் 18 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 17 

- ஆகஸ்ட் 19 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 18

- ஆகஸ்ட் 20 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 19

- ஆகஸ்ட் 21 ம் தேதி (தீபாவளி நாள்) சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 20

- ஆகஸ்ட் 22 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 21 

- ஆகஸ்ட் 23 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 22 


வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும். வட இந்திய ரயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில்வே கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலே குறிப்பிட்ட தேதிகளில் காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவும் துவங்கும். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும். அதே போல் தீபாவளி முடிந்த மீண்டும் ஊர் திரும்பும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவும் அடுத்தடுத்த தேதிகளில் துவங்கும். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதிகளை குறித்து வைத்துக் கொண்டு தீபாவளி பயணத்திற்கான ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.


ஒருவேளை இந்த ரெகுலர் ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் கவலைப்படாதீங்க. ரயில்வே துறை சிறப்பு ரயில்களையும் அறிவிக்கும். அதை மிஸ் பண்ணாம புக் பண்ணிடுங்க. ஒரு வேளை அதிலும் மிஸ் ஆகி விட்டால் இருக்கவே இருக்கிறது தமிழ்நாடு அரசுப் பேருந்து. அதில் புக் பண்ணி சொந்த ஊருக்குப் போய் தடபுடலாக பண்டிகையைக் கொண்டாடிட்டு வாங்க.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்