தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!

Oct 30, 2024,10:36 AM IST

சென்னை : தீபத் திருநாளான தீபாவளி கொண்டாடத்திற்குரிய நாளாகவும், முக்கிய விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடுவதாகவும், ராவணனை வதம் செய்த பிறகு தங்களின் வனவாசம் முடிந்த ராமர், சீதை மற்றும் லட்சுமணருடன் அயோத்திக்கு திரும்பியதை கொண்டாடும் நாளே தீபாவளி என்றும் புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் இது தீமைகள் அழிந்து, நன்மைகள் துவங்குவதற்கான நாளாக தீபாவளி திருநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


தீபாவளி திருநாள் உலகின் பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் தென் மாநிலங்களில் ஒரே நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி, லட்சுமி தேவியை வரவேற்கும் நாளாகவும், கேதார கெளரி விரதம் கொண்டாடும் நாளாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி திருநாள் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.




தீபாவளித் திருநாளை கங்கா ஸ்நானத்துடன் துவங்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதாவது, தீபாவளித் திருநாளன்று அதிகாலை 3 முதல் 05.30 மணி வரையிலான நேரத்திற்குள் ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளி நமக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம். அந்த வகையில் நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், வெது வெதுப்பான நீரில் கங்கா தேவியும், சீயக்காயில் சரஸ்வதி தேவியும், புத்தாடையில் மகா விஷ்ணுவும், இனிப்பில் அமிர்தமும், பட்டாசு பொறியில் ஜீவாத்மாவும், லேகியத்தில் தன்வந்திரி பகவானும் எழுந்தருளுவதாக ஐதீகம்.


தீபாவளி அன்று அதிகாலை 03.30 மணி துவங்கி 05.30 மணி வரையிலான நேரம் எண்ணெய் வைத்து குளிப்பதற்கான நேரமாகும். நல்லெண்ணை அப்படியே தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் தேய்த்துக் கொள்ளலாம். காய்ச்சி தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான அளவு எண்ணெய்யை எடுத்து இரும்பு கடாயில் லேசாக சூடேறும் வரை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். அதோடு சிறிது மிளகு, சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு தட்டி போட்டு இறக்கி, சூடு ஆறிய பிறகு வடிகட்டி, அந்த எண்ணெய் மற்றும் சீயக்காயை பூஜை அறையில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.


குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, முதலில் தெய்வத்தையும், பிறகு பூமா தேவியையும் வேண்டிக் கொள்ள வேண்டும். தரையில் மூன்று சொட்டு நல்லெண்ணெய் மற்றும் சீயக்காய் வைத்து, அதை அப்படியே கைகளில் வழித்து தலையில் கீழிருந்து மேலாக மூன்று முறை தேய்க்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்தோ அல்லது தலைக்கு மட்டுமோ தேய்த்தோ அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும். குளித்து விட்டு புத்தாண்டை உடுத்தி, பட்டாசு வெடித்து, 6 மணிக்கு முன்பாக சிறிதளவு இனிப்பு சாப்பிட்டு விட வேண்டும். இதுவே பாரம்பரிய முறையில் எண்ணெய் தேய்த்து குளித்து, தீபாவளி கொண்டாடும் முறையாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!

news

சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்