சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இனிமேல் இதுபோல நடக்காத படி பார்த்துக் கொள்ளப்படும். தாக்குதல் நடத்திய இளைஞர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜியை விக்னேஷ்வரன் என்ற இளைஞர் இன்று சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்கு விரைந்து வந்தார்.
டாக்டர் பாலாஜியை அவர் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, கடந்த 6 மாதமாக விக்னேஷ்வரன் தனது தாயாருக்கு சிகிச்சை அளிக்கு இங்கு வந்துள்ளார். அவர் மீது அப்போதெல்லாம் எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால் தனது தாயாருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அங்கு அவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு தவறாகப் புரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்து விட்டார்.

அவரது செயல் கடும் கண்டனத்துக்குரியது. காவல்துறையினர் உடனடியாக அவரைக் கைது செய்து விட்டனர். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாதபடிக்கு பார்த்துக் கொள்ளப்படும். அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்ட அரசு இது. அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்படும்.
டாக்டர் பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் உடன் இருக்கிறார்கள். அவரது மனைவியும் வந்துள்ளார். அவரும் டாக்டர்தான். அனைத்து சிறப்பு சிகிச்சையும் டாக்டர் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
வேலை நிறுத்தம் செய்வதாக அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவர்களுடன் மாலை 3 மணிக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
யாசகத்தோழி!
வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!
பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!
சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!
Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!
Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!
Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!
World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!
{{comments.comment}}