முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான.. அமைச்சரவையில் நம்பர் 3 உதயநிதி ஸ்டாலின்.. நம்பர் 2 யார் தெரியுமா?

Oct 01, 2024,06:35 PM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் 3வது இடம் தரப்பட்டுள்ளது.


2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று திமுக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவரது ஆட்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சரவையில் முக்கிய நிகழ்வாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக உயர்த்தப்பட்டுள்ளார்.




திமுக வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மறைந்த கலைஞர் கருணாநிதி காலத்தில் மு.க.ஸ்டாலின் படிப்படியாக நிதானமாக ஒவ்வொரு லெவலாக உயர்த்தப்பட்டு வந்தார். அவரும் துணை முதல்வராக இருந்துள்ளார். இந்த நிலையில், ஸ்டாலினின் புதல்வரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஒவ்வொரு உயர்வும் மின்னல் வேகத்தில் வந்தவண்ணம் இருக்கிறது.  அரசியலுக்கு வந்து 5 ஆண்டு காலத்திலேயே இளைஞர் அணி செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர் என்று உயர்ந்து வந்த உதயநிதி தற்போது துணை முதல்வராகியுள்ளார்.


துணை முதல்வராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் 3வது இடம் தரப்பட்டுள்ளது. வழக்கமாக துணை முதல்வராக இருப்பவர்களுக்கு முதல்வருக்கு அடுத்த இடம்தான் தரப்படுவது வழக்கம். ஆனால் மிகவும் மூத்த  தலைவரான துரைமுருகன் 2வது இடத்தில் அப்படியே நீடிக்கிறார். அவருக்கு அடுத்த இடம்தான் உதயநிதிக்குத் தரப்பட்டுள்ளது. மூத்த தலைவர் என்ற அடிப்படையில் துரைமுருகன் இடம் உதயநிதிக்குத் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.


செந்தில் பாலாஜிக்கு 21.. பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு 28


இவர்களுக்கு அடுத்த இடங்களில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, எவ வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, முத்துச்சாமி, பெரியகருப்பன், தாமோ அன்பரசன், மு.ப. சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், ஆர். ராஜேந்திரன்,  சக்கரபாணி, வி.செந்தில் பாலாஜி, ஆர். காந்தி, மா. சுப்பிரமணியன், பி. மூர்த்தி, சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வி.மெய்யநாதன், சி.வி.கணேசன், டிஆர்பி ராஜா, டாக்டர் மதிவேந்தன், கயல்மொழி செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.


அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் கழித்து பின்னர் ஜாமினில் விடுதலையாகி அமைச்சராகியுள்ள செந்தில் பாலாஜிக்கு 21வது இடம் தரப்பட்டுள்ளது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

news

கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

news

வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!

news

SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்