டெல்லி: பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜக ஆட்சியே அமைகிறது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கூறியுள்ள நிலையில் தேசபந்து டிஜிட்டல் என்ற செய்தித் தாளின் எக்சிட் போல் முற்றிலும் நேர் மாறாக, இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கப் போவதாக கூறியுள்ளது.
தேசபந்து டிஜிட்டல் செய்தித்தாள் ஒரு எக்சிட் போலை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், மாறாக இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், பெரும்பான்மை பலம் கிடைக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
தேசபந்து டிஜிட்டல் எக்சிட் போல் முடிவு இதுதான்:
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், இந்தியா கூட்டணிக்கு 260 முதல் 290 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 215 முதல் 245 இடங்கள் வரையே கிடைக்கும் என்று இது கணித்துள்ளது. மற்றவர்களுக்கு 28 முதல் 48 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புண்டு.
கேரளா
கேரளாவில் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் கூட்டணிக்கு 16 முதல் 18 சீட்டுகள் வரை கிடைக்கும். இடதுசாரி கூட்டணிக்கு 2 முதல் 3 சீட்டுகளே கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகபட்சம் ஒரு இடம் கிடைக்கலாம்.
கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் இந்தியா கூட்டணிக்கு 18 முதல் 20 இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 8 முதல் 10 இடங்களுக்கு சான்ஸ் உள்ளது. மற்றவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்.. அசைக்க முடியாத சக்தியாக திமுக!
ஆந்திரப் பிரதேசம்
மொத்தம் உள்ள 28 இடங்களில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 17 இடங்கள் வரை கிடைக்கலாம். தெலுங்குதேசம் கூட்டணிக்கு 7 முதல் 9 இடங்களுக்கு வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சம் 2 சீட் கிடைக்கும்.
தெலங்கானா
தெலங்கானாவில் 17 இடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 இடங்கள் வரை கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புண்டு. பிஆர்எஸ் கட்சிக்கு 2 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி
டெல்லியில் மொத்தம் 7 எம்.பி. தொகுதிகள் உள்ளன. டெல்லியைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் வரை கிடைக்கலாம். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 2 முதல் 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாக் கருத்துக் கணிப்புகளுமே திமுக ஸ்வீப் செய்வதாகத்தான் சொல்லியுள்ளது. தேசபந்துவும் அதையே சொல்லியுள்ளது. அதாவது திமுக கூட்டணிக்கு 37 முதல் 39 சீட்டுகள் வரை கிடைக்கும். அதிமுகவுக்கு அதிகபட்சம் ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகள் பாஜக தரப்பில் மகிழ்ச்சியையும், இந்தியா கூட்டணி தரப்பில் அப்செட்டையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த எக்சிட் போல்களை இறுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உண்மையான ரிசல்ட்தான் யார் வென்றது என்பதை சரியாக சொல்லும் என்பதால் அதுவரை அனைவரும் காத்திருப்போம் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளன.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}