5 பிள்ளைகளும் கண்டுக்கலை.. ரூ. 1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்த தாத்தா!

Mar 06, 2023,04:34 PM IST
முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் 85 வயதான முதியவர் ஒருவர் தனது ரூ. 1. 5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மாநில அரசுக்கு எழுதி வைத்து விட்டார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனராம். யாரும் அவரைக் கண்டு கொள்ளாததால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த பெரியவர்.



முசாபர் நகரைச் சேர்ந்தவர் நாதுசிங். இவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் கல்யாணமாகி விட்டது. மகன் சஹரன்பூரில் ஆசிரியராக இருக்கிறார். நாதுசிங்குக்குச் சொந்தமாக ரூ. 1.5 கோடி  மதிப்புள்ள  வீடும், நிலமும் உள்ளது. 

இந்த நிலையில் தனது சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்துள்ளார் நாது சிங். தனது உடலையும் மருத்துவக் கல்லூரிக்கு தானம் தருவதாக எழுதிக் கொடுத்து விட்டார். தான் இறந்த பிறகு தனது இறுதிச் சடங்கில் தனது பிள்ளைகள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் எழுதி வைத்துள்ளார்.

நாதுசிங்கின் மனைவி இறந்த பிறகு, அவரை அவரது பிள்ளைகள் கவனிக்கவில்லையாம். இதனால் தனிமையில்தான் வசித்து வருகிறார் நாது சிங்.  தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார் இந்த பெரியவர். இத்தனை பிள்ளைகள் இருந்தும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று வருத்தத்தில் இருந்து வருகிறார் நாது சிங். இதனால்தான் சொத்துக்களை அரசுக்கே எழுதிக் கொடுத்து விட்டார். அங்கு தனது மறைவுக்குப் பின்னர் பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ கட்டிக் கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார் நாது சிங்.

கடந்த ஆறு மாதமாக முதியோர் இல்லத்தில் நாது சிங் வசித்து வருகிறார். இதுவரை அவரது பிள்ளைகள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லையாம். இதனால்தான் அவர் மனம் வெறுத்துப் போய் விட்டாராம்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்