சென்னை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
20 வயதான வலது கை பேட்ஸ்மேனான ப்ரீவிஸ், அதிரடியாக விளையாடக்கூடிய திறமை பெற்றவர். அவர் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணி அவரை ரூபாய் 2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பேபி ஏபி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ப்ரீவிஸ்.
குர்ஜாப்னீத் சிங் இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முழு சீசனிலிருந்தும் விலகியுள்ளார்.

டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் இணைவது அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இடம் பெறவில்லை. தோனி தலைமையில் சிஎஸ்கே ஆடி வருகிறது.
தொடர் தோல்விகளைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சூப்பராக ஆடி வெற்றி பெற்றது. இளம் வீரர் ஷேக் ரஷீத் சிறப்பாக ஆடியிருந்தார். இந்த நிலையில் பேபி ஏபியும் அணியில் இடம் பெறுகிறார். அவருக்கு ஆடும் வாய்ப்புகிடைத்து அவரும் அதிரடி காட்டினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் போட்டிகளில் கலக்கும் என்று தெரிகிறது.
இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!
Heat Wave warning: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி...இணையத்தைக் கலக்கும் அதிரடித் தகவல்!
பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!
தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!
{{comments.comment}}