- டிலானி ஸ்ரீதரன்
அல்லி நகரின் அகல் விளக்கே
வெள்ளித் திரையின்
மங்காத ஒளியே,
கிராமத்து வாழ்க்கையின் வாசனையை
வசனங்களில் பொதித்தவரே,
திரையிசையின் இயக்குநரும் தயாரிப்பாளரும் திரைக்கதை ஆசிரியரும் நடிகருமானவரே,
உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும்
உள்ளத்தில் உதித்தவற்றை
வெளிக்காட்டியவரே,
எளிமையின் சின்னமாகவும் ஏற்றத்தின் திண்ணமாகவும் திகழ்ந்தவரே,
சமூகத்தில் சாதி,மதம்
மூடநம்பிக்கையென்ற
முகமூடிகளை
திரைமூலம் கிழித்தவரே,

துள்ளிடும் காதலை பதினாறு வயதினிலே பக்குவமாக சொன்னவரே,
கிழக்கே போகும் ரயிலிலும் சிகப்பு ரோஜாக்களை தந்தவரே
புதிய வார்ப்புகளில் நிறம் மாறாத பூக்களாக நின்றவரே
கல்லுக்குள் ஈரம் என நிழலாக தொடர்ந்தவரே
அலைகள் ஓய்வதில்லையென காதல் ஓவியமாய் தீட்டியவரே
வாலிபமே வா வா என்று மண்வாசனையுடன் பிணைந்தவரே
தாவணிக் கனவுகளாய் புதுமைப் பெண்களை மெருகூட்டியவரே
ஒரு கைதியின் டயரிக்கும் முதல் மரியாதை கொடுத்தவரே
கடலோர கவிதைகளை வேதம் புதிதென பின்னணிக் குரல் கொடுத்தவரே
என் உயிர் தோழன் என இதயத்தால் வென்றவரே
தந்துவிட்டேன் என்னை என்று நாடோடி தென்றலாக வருடியவரே
கேப்டன் மகளாக கிழக்குச் சீமையிலே பாசத்தை காட்டியவரே
பசும் பொன்னாக கருத்தம்மாவை சித்தரித்தவரே
அந்தி மந்தாரையாக தமிழ்ச்செல்வனை உருவாக்கியவரே
கண்களால் கைது செய்து ஈர நிலத்தில் விதைத்தவரே
ஆயுத எழுத்தாகி ஈஸ்வரனாக முடி சூடியவரே
தாஜ்மஹாலில் மகனுடன் இணைந்து கடல் பூக்களாகியவரே
சொல்லித் தீருமா உங்கள் படைப்பின் புகழை,
வெல்லத்தான் முடியுமா உங்கள் தமிழின் அழகை,
கவிதைக்குள்ளும் காந்தம் வைத்தவர் நீங்கள்,
கிராமத்துக்குள்ளும் திரை உலகத்தை அறிமுகப்படுத்தியவர் நீங்கள்,
சிகரமாக நின்று எளிமையாக கருவை சித்தரித்து,
இயல்பாக விதைத்தீர்கள் வசனங்களை மனதினுள் நுழைந்து,
இந்திய திரையுலகின் இயக்குநர் இமயமே
உங்கள் இறப்பு எங்களுக்கு பேரிழப்பு!
வாழும் காலத்தையும் வாழ்க்கையையும் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய கதாநாயகரே....
மீண்டும் ஒரு பிறப்பு உண்டு கூடிய சீக்கிரம் மண்ணில் உதிக்க வேண்டுகிறோம்.....!
சுடர்க்கொடி கேளாய்!
வீண் சொல் தவிர்த்திடு
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
RIP Bharathiraja: பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை...
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
சினிமாவின் சிகரம் சரிந்தது!
{{comments.comment}}