சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகஸ்ட் 7ம் அதிகாலையில் திருவண்ணாமலை கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க லோகேஷ் கனகராஜ், கூலி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ளனர். தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழித் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களை இதில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் வருகிறார்.
திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் திருவண்ணாமலை போய் சாமி கும்பிட்டுள்ளார். தன்னை சந்திக்க முயன்ற செய்தியாளர்களிடம், தனியாக பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன் என்று கூறி அவர்களைத் தவிர்த்து விட்டுச் சென்றார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் ரத்னா குமார், லோகேஷுடன் வந்திருந்தார்.

கூலி திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த படங்களில் இது போன்ற சான்றிதழ் பெறுவது இதுவே முதல் முறை. இதுகுறித்து ஒரு சானலுக்கு அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், இது ஒரு வன்முறையான படமாக இருக்கும். அதேசமயத்தில், குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் அனைத்து உணர்வுகளும் படத்தில் இருக்கும் என்றார்.
சென்னையில் நடந்த ஆடியோ ரிலீஸைத் தொடர்ந்து சமீபத்தில் ஹைதராபாத்தில் தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் ஒரு வீடியோ செய்தி அனுப்பியிருந்தார். அதில் அவர் லோகேஷை ராஜமௌலியுடன் ஒப்பிட்டு பேசினார். "லோகேஷ் கனகராஜ் இங்கே (தமிழ் சினிமாவில்) ராஜமௌலி மாதிரி. ராஜமௌலி படங்கள் எல்லாம் வெற்றி பெறுவது போல, லோகேஷ் படங்கள் எல்லாமே ஹிட் படங்கள்" என்று ரஜினிகாந்த் கூறினார்.
கூலி ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படம். குடும்ப சென்டிமென்ட்டும் இழையோடும். அதேசமயம், லோகேஷின் அஸ்திரமான அதிரடி வெட்டுக் குத்து மேலோங்கியிருக்குமாம். தேவா என்ற வயதான தங்கக் கடத்தல்காரர் வேடத்தில் ரஜினி நடித்துள்ளாராம். 2 மணி நேரம் 48 நிமிடம் ஓடும் வகையில் படம் இருக்கிறதாம்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா மற்றும் சௌபின் ஷாகிர் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}