சென்னை: சென்னையில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் பாஜக தரப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று உள்ளார். பொதுவாக ஜனவரியில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேமுதிக, பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து ஒன்று பரவி வந்தது. இது குறித்து தேமுதிக எந்த தகவலையும் வெளியிடாமலும், கூட்டணி குறித்த செய்தி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் அருகிலேயே அவர் அமர்ந்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}