சென்னை: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு வழியாக எந்த சிக்கலும் இன்று முடிவுக்கு வந்துள்ளது. கடைசிக் கட்சியாக காங்கிரஸ் கட்சிக்கு இன்று மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கி திமுக உடன்பாடு செய்துள்ளது. இத்துடன் திமுகவின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது.
தொகுதிப் பங்கீட்டின் இறுதியில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், கே.சி. வேணுகோபால் தலைமையிலான காங்கிரஸ் குழுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கடந்த 2019 தேர்தலிலும் இதேபோல 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பெற்றது. அதில் தேனி தொகுதியில் மட்டும் தோற்று மற்ற 8 இடங்களிலும் வென்றது. இந்த முறையும் 9 தொகுதிகளை அது பெற்றுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது இனி அறிவிக்கப்படும்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:
திமுக - 21
காங்கிரஸ் - தமிழ்நாடு 9 + புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2
விடுதலைச் சிறுத்தைகள் - 2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1
மதிமுக - 1
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி - 1
உதயசூரியனின் தொகுதிகள் குறைந்தது
கடந்த 2019 தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. இதுதவிர, விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கொடுத்த 2 தொகுதிகளில் விழுப்புரம் (தனி) , இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட்ட பெரம்பலூர், நாமக்கல்லில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டனர். இதன் மூலம் 24 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்றது. அதாவது உதயசூரியனுக்கு 24 எம்.பிக்கள் கிடைத்தனர்.
இந்த முறை அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயகக் கட்சி இந்த முறை கூட்டணியில் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக கூறி விட்டது. மதிமுகவும் தனது சின்னத்தில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மட்டும் உதயசூரியனில் போட்டியிடும். அப்படிப் பார்க்கும்போது இந்த முறை 22 தொகுதிகளில் மட்டுமே உதயசூரியன் களத்தில் நிற்கப் போகிறது. இது கடந்த முறை போட்டியிட்டதை விட 2 தொகுதிகள் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா
வரமும்.. வரம்பும்!
{{comments.comment}}