மதுரை: மதுரையில் இன்று தொடங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பாக புதிதாக 2 சார்பு அணிகளை உருவாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். வழக்கமாக சென்னையில்தான் நடைபெறும். ஆனால் இந்த வருட பொதுக்குழுவை மதுரையில் கூட்டியுள்ளது திமுக தலைமை. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதை பிரமாண்டமான மாநாடு போல மாற்றி விட்டனர் திமுகவினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரமாண்ட ரோட்ஷோ நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்று பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது.

தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கடந்த ஓராண்டில் கட்சி ஆற்றிய பணிகள் குறித்து ஆழமாக ஆராயப்படும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மற்றும் செயல்பாட்டு உத்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், சமூக நீதி கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது போன்ற பல்வேறு முதன்மையான விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் ஆற்றப் போகும் உரை, பொதுக்குழுவின் மிக முக்கியமான அம்சமாகத் திகழும். மேலும் இந்த பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன. இன்று காலை பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும் முக்கிய அறிவிப்பாக 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு அணியும், ஆசிரியர்கள், கல்வியாளர்களக் கொண்ட கல்வியாளர் அணி அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
திமுகவில் தற்போது உள்ள சார்பு அணிகள் விவரம்:
பொதுக் குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மதுரையில் பலம் பொருந்திய திமுக தலைவராக வலம் வந்த தனது அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்தது பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. வருகிற சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு மு.க.அழகிரி வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}