மதுரை: மதுரையில் இன்று தொடங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பாக புதிதாக 2 சார்பு அணிகளை உருவாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். வழக்கமாக சென்னையில்தான் நடைபெறும். ஆனால் இந்த வருட பொதுக்குழுவை மதுரையில் கூட்டியுள்ளது திமுக தலைமை. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதை பிரமாண்டமான மாநாடு போல மாற்றி விட்டனர் திமுகவினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரமாண்ட ரோட்ஷோ நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்று பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது.

தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கடந்த ஓராண்டில் கட்சி ஆற்றிய பணிகள் குறித்து ஆழமாக ஆராயப்படும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மற்றும் செயல்பாட்டு உத்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், சமூக நீதி கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது போன்ற பல்வேறு முதன்மையான விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் ஆற்றப் போகும் உரை, பொதுக்குழுவின் மிக முக்கியமான அம்சமாகத் திகழும். மேலும் இந்த பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன. இன்று காலை பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும் முக்கிய அறிவிப்பாக 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு அணியும், ஆசிரியர்கள், கல்வியாளர்களக் கொண்ட கல்வியாளர் அணி அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
திமுகவில் தற்போது உள்ள சார்பு அணிகள் விவரம்:
பொதுக் குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மதுரையில் பலம் பொருந்திய திமுக தலைவராக வலம் வந்த தனது அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்தது பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. வருகிற சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு மு.க.அழகிரி வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்
நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்
திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?
பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு
நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
{{comments.comment}}