மதுரை: மதுரையில் இன்று தொடங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பாக புதிதாக 2 சார்பு அணிகளை உருவாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். வழக்கமாக சென்னையில்தான் நடைபெறும். ஆனால் இந்த வருட பொதுக்குழுவை மதுரையில் கூட்டியுள்ளது திமுக தலைமை. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதை பிரமாண்டமான மாநாடு போல மாற்றி விட்டனர் திமுகவினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரமாண்ட ரோட்ஷோ நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்று பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது.
தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கடந்த ஓராண்டில் கட்சி ஆற்றிய பணிகள் குறித்து ஆழமாக ஆராயப்படும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மற்றும் செயல்பாட்டு உத்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், சமூக நீதி கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது போன்ற பல்வேறு முதன்மையான விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் ஆற்றப் போகும் உரை, பொதுக்குழுவின் மிக முக்கியமான அம்சமாகத் திகழும். மேலும் இந்த பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன. இன்று காலை பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும் முக்கிய அறிவிப்பாக 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு அணியும், ஆசிரியர்கள், கல்வியாளர்களக் கொண்ட கல்வியாளர் அணி அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
திமுகவில் தற்போது உள்ள சார்பு அணிகள் விவரம்:
பொதுக் குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மதுரையில் பலம் பொருந்திய திமுக தலைவராக வலம் வந்த தனது அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்தது பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. வருகிற சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு மு.க.அழகிரி வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Lunch Tips: மதிய உணவில் கண்டிப்பாக மோர் சேர்க்க வேண்டும்.. ஏன் தெரியுமா?
Actually அவங்க நேஹா இல்லையாம்.. போபாலை அதிர வைத்த.. வங்கதேசத்து அப்துல் கலாம்!
ஆஸ்ட்ரோனாமர் சிஇஓ ஆண்டி பைரன் ராஜினாமா.. பெண் எச்ஆர் அதிகாரியுடன் சிக்கி சர்ச்சையானதால் விலகல்!
ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியை மணந்த பழங்குடியினப் பெண்.. சிம்லாவில் ஆச்சரிய திருமணம்
மகா மோசமாக இருக்கும் மதுரை.. மறு சீரமைப்பு நடவடிக்கை தேவை.. முதல்வருக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை
ஆபரேஷன் சிந்தூரின்போது.. 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டொனால்ட் டிரம்ப் புதுத் தகவல்
42 நாடுகளுக்குப் போன பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன்.. கார்கே கேள்வி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... கொடூரனை கைது செய்யாதது தான் அரசின் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்!
பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு !
{{comments.comment}}