ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி

Apr 17, 2026,09:27 PM IST


புதுடில்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய அரசை மிகக்கடுமையாகச் சாடிப் பேசினார். தென் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அரசியல் அதிகாரம் இந்த மசோதாக்களால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை அவர் விரிவாகப் பட்டியலிட்டார்.


மகளிர் இடஒதுக்கீடு ஒரு கேடயமா? 


மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களை எதிர்த்து இரண்டாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் கருப்பு உடையணிந்து பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது பேசிய கனிமொழி, "நாங்கள் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனைக் கேடயமாக முன்னிறுத்தி, அதன் பின்னால் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருவதையே எதிர்க்கிறோம்," என்றார். 2023-லேயே நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன் என்றும், தற்போது 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் அவசரமாக இதனை விவாதிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


தென் மாநிலங்களுக்கு நேரும் அநீதி :




தொகுதி மறுவரையறை குறித்துப் பேசுகையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குப் பரிசாக அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறீர்களா? எம்.பி.க்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தைத் திருத்திவிட முடியும் என்ற நிலை உருவாகும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் கூட தென் மாநிலங்களின் பங்களிப்பு முழுமையாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.


"அமித் ஷா சொல்வது ஒன்று.. மசோதாவில் இருப்பது வேறொன்று"


மத்திய அமைச்சர் அமித் ஷா சபைக்கும் மக்களுக்கும் அளிக்கும் விளக்கங்கள் மசோதாவில் உள்ள சரத்துக்களுடன் ஒத்துப்போகவில்லை என்று கனிமொழி சுட்டிக்காட்டினார். தொகுதி மறுவரையறை எந்த அடிப்படையில் செய்யப்படும் என்பது குறித்துத் தெளிவான விளக்கம் தேவை என அவர் வலியுறுத்தினார். கூட்டாட்சியைச் சிதைக்கும் முயற்சியாகவே இந்த மசோதா இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.


"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான்.."


திமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்ததை பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனிமொழி பேசினார். "இந்துத்துவாவைப் பாதுகாப்பதாகச் சொல்லும் ஆளும் கட்சியினருக்குக் கருப்பு நிறக் கடவுளான காளி நினைவில் இல்லையா? பெண் சக்தியைப் பறைசாற்றும் காளி தேவியும் கருப்பு ஆடைதான் அணிந்துள்ளார். அவர் ஈகோ மற்றும் அராஜகத்தை விரட்டுபவர். அதேபோல, சுயமரியாதை மற்றும் போராட்ட குணத்தைக் கற்றுக்கொடுத்த பெரியாரின் நிறமான கருப்பை அணிந்து எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்," என்று ஆவேசமாகப் பேசினார்.


இந்த விவாதத்தின் மூலம், தென் மாநிலங்களின் மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக அவர்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமையக்கூடாது என்ற வலுவான கோரிக்கையை திமுக முன் வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்