2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

Aug 23, 2025,11:34 AM IST
மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து இப்போது பேசுவது சரியில்லை. அவர்கள் 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை. ஆனால்  அதிலிருந்தும் அவர்கள் ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் இவர்களின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் ராஜீவ் சுக்லா. இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள்? ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். அவர்கள் இன்னும் விளையாடும்போது, இப்போது ஏன் பிரியாவிடை பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் ஏன் இப்போதே கவலைப்படுகிறீர்கள்?. 



பிசிசிஐ யாரையும் ஓய்வு பெறக் கூறாது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விஷயத்திலும் இதுவே நடக்கும். அவர்கள் சொந்தமாகவே முடிவை எடுக்க வேண்டும். விராட் கோலி இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறார். ரோஹித் சர்மா நன்றாக விளையாடி வருகிறார். எனவே அவர்களின் பிரியாவிடை பற்றி இப்போதே நினைக்க வேண்டாம் என்றா் அவர்.

இதற்கிடையே, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்காக பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் அக்டோபர் மாதம் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்