புதுச்சேரியில் தேசியக் கொடியேற்றினார் டாக்டர் தமிழிசை

Aug 15, 2023,11:37 AM IST
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

தெலங்கானா ஆளுநராக உள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி யூனியன் பிரதேச  துணை நிலை ஆளுநராகவும் இருக்கிறார். இன்று சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி ராஜ் நிவாஸில்  சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கொடியேற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.



முன்னதாக நேற்று தமிழிசை செளந்தரராஜன் விடுத்த வாழ்த்துச் செய்தியில்,  புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமது தேசத் தலைவர்கள் அரும்பாடுபட்டு தங்கள் இன்னுயிரைத் தந்து நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்தார்கள். அத்தகைய தியாகச் தலைவர்களின் வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.



தொலைநோக்குப் பார்வை கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின்கீழ் - கல்வி, மருத்துவம், அறிவியல், வேளாண்மை, விண்வெளி ஆராய்ச்சி என்று பல துறைகளிலும் இந்தியா இன்று உலகின் முன்னோடி நாடாகத் திகழ்கிறது.

நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும். புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

பிளாஸ்டிக் இல்லாத வளாகம்

இதற்கிடையே,  புதுச்சேரி ஆளுநர் மாளிகை வளாகம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத வளாகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உறுதி மொழியை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



நேற்று இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், குவளைகள், தட்டுகள் போன்றவற்றைத் தவிர்த்து அதற்கு பதிலாக துணிப்பை, காகிதப்பை, சணல்பை, சில்வர் பொருட்கள் போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் பட்டது.

மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத புதுச்சேரியை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள தடை ஆணையை மதிக்கவும் புதுச்சேரி அரசின் நோக்கத்திற்கு ஆதரவாக இருக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் - விஜய் பேச்சு

news

ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்

news

சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; விஜய் பதிவு

news

மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.7,600 குறைவு

news

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியா உடனான போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்...ஐசிசி அதிரடி அறிக்கை

news

அன்பு மாணவர்களே!

news

நீ மழை! (காதல் தொடர்கதை.. அத்தியாயம் 1)

அதிகம் பார்க்கும் செய்திகள்