சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் ஆட்சி அமைக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என சூசகமாக கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக- பாஜக கூட்டணியை அறிவித்தபோதே 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் இதனை மறுத்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என கூறினார். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கும் என டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சூசமாக பேசியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

நிச்சயமாக தமிழகம் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் இருவரும் இருந்தோம் என்றால் எங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். நான் ஏற்கனவே சொன்னது போல், குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும். ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். ஆக அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால் தான் நாம் எல்லோரும் இலை போட்டு சரியாக சாப்பிட முடியும் என கூறினார்.
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
மஞ்சள் மாநகரம் ஈரோடு மாநகரின் மாபெரும் பெரிய மாரியம்மன் திருவிழா
தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
என்ன சொல்றீங்க?...ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}