டில்லி : தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது தேர்தல் கமிஷன். இதன் முதல் கட்டமாக அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சிகள் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார். அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவம்பர் 04ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்க உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அக்டோபர் 28ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 09ம் தேதி வெளியாகும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 07இல் வெளியீடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றிற்கான காலிக்கெடு டிசம்பர் 09ம் தேதி துவங்கி, ஜனவரி 08ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் சரி பார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாகவும் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ம் தேதி பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் இன்னும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}