டில்லி : தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது தேர்தல் கமிஷன். இதன் முதல் கட்டமாக அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சிகள் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார். அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவம்பர் 04ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்க உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அக்டோபர் 28ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 09ம் தேதி வெளியாகும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 07இல் வெளியீடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றிற்கான காலிக்கெடு டிசம்பர் 09ம் தேதி துவங்கி, ஜனவரி 08ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் சரி பார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாகவும் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ம் தேதி பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் இன்னும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}