டில்லி : தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது தேர்தல் கமிஷன். இதன் முதல் கட்டமாக அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சிகள் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார். அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவம்பர் 04ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்க உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அக்டோபர் 28ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 09ம் தேதி வெளியாகும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 07இல் வெளியீடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றிற்கான காலிக்கெடு டிசம்பர் 09ம் தேதி துவங்கி, ஜனவரி 08ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் சரி பார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாகவும் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ம் தேதி பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் இன்னும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}