டில்லி : தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது தேர்தல் கமிஷன். இதன் முதல் கட்டமாக அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சிகள் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார். அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவம்பர் 04ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்க உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அக்டோபர் 28ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 09ம் தேதி வெளியாகும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 07இல் வெளியீடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றிற்கான காலிக்கெடு டிசம்பர் 09ம் தேதி துவங்கி, ஜனவரி 08ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் சரி பார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாகவும் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ம் தேதி பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் இன்னும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}