குழந்தைகள் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் இடி ரெய்டு

Oct 13, 2025,06:21 PM IST

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரைப் பறிக்க காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிக்கும் ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின்உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறந்ததற்கு காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னணியில் இந்த சோதனைகள் நடந்தன. சமீபத்தில்தான் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.




2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட ஸ்ரேசன் நிறுவனம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை பலமுறை மீறிய போதிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான சோதனையும் இன்றி செயல்பட்டு வந்துள்ளது என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.


அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகளின் பங்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்

news

நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்

news

திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?

news

பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு

news

ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்