குழந்தைகள் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் இடி ரெய்டு

Oct 13, 2025,06:21 PM IST

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரைப் பறிக்க காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிக்கும் ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின்உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறந்ததற்கு காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னணியில் இந்த சோதனைகள் நடந்தன. சமீபத்தில்தான் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.




2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட ஸ்ரேசன் நிறுவனம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை பலமுறை மீறிய போதிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான சோதனையும் இன்றி செயல்பட்டு வந்துள்ளது என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.


அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகளின் பங்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்