குழந்தைகள் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் இடி ரெய்டு

Oct 13, 2025,10:37 AM IST

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரைப் பறிக்க காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிக்கும் ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின்உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறந்ததற்கு காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னணியில் இந்த சோதனைகள் நடந்தன. சமீபத்தில்தான் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.




2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட ஸ்ரேசன் நிறுவனம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை பலமுறை மீறிய போதிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான சோதனையும் இன்றி செயல்பட்டு வந்துள்ளது என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.


அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகளின் பங்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ஜெயிலர் 2.. பிரமாண்ட ஆக்ஷன் திருவிழா.. ரஜினியுடன் இன்னொரு விருந்தும் ரெடியாகப் போகுதாம்!

news

என்னை விட்ருங்க... நான் விலகிக்கிறேன்.. சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க.. சுரேஷ் கோபி

news

என்னய்யா இது... நகை வாங்குறதா வேணாமா?... நகை விலை உயர்வு குறித்து புலம்பி வரும் வாடிக்கையாளர்கள்

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

ஜப்பானை உலுக்கும் திடீர் காய்ச்சல்.. 4000 பேர் பாதிப்பு.. தொற்றுநோயாக அறிவித்தது அரசு!

news

குழந்தைகள் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் இடி ரெய்டு

news

புரட்டாசி தேய்பிறை அஷ்டமி.. பணப் பிரச்சினை தீரும்.. கடன் தொல்லை நீங்கும்.. மகிழ்ச்சி அதிகரிக்கும்

அதிகம் பார்க்கும் செய்திகள்