சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரும் தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் பாஜக- அதிமுக பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் மீண்டும் கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணி குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். அதற்கு பதிலடி கொடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பேசி வருகிறார். அதே சமயத்தில் சமீபத்தில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

இந்த நிலையில் தமிழக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி அறையில் இருவர் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை நடைபெறும் முக்கிய பிரச்சினைகளில் அதிமுக-பாஜக எம்எல்ஏக்கள் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் மதுவிலக்கு தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மதுவிலக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், இன்று மதுவிலக்கு தொடர்பான மானிய கோரிக்கைகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் மதுவிலக்கு தொடர்பான கேள்வியை முன்வைக்க இருக்கிறார். இவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ். பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
விண்ணமுதம்!
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
என்ன சொல்ல...!
{{comments.comment}}