சென்னை: தேர்தல் ஆணைய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தமிழ்நாடு லோகச்பா தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த சதவீத அளவு 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதான் இறுதி சதவீதம் என்று ஒரு பட்டியலை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் 19ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நடந்த நிலையில் பல வாக்குச் சாவடிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் டோக்கன் கொடுத்து வாக்களிக்க வைக்கப்பட்டனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஒரு பட்டியல் வெளியானது. அதில் கிட்டத்தட்ட 72.09 சதவீத அளவுக்கு வாக்குப் பதிவு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இரவு 12 மணியளவில் வெளியான பட்டியலில் மாறுபட்ட வாக்குப் பதிவு விவரம் வெளியானது. அதாவது 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பெரும் பேசு பொருளானது. மாற்றி மாற்றி வந்த தகவல்களால் பலரும் குழப்பமடைந்தனர். இந்த நிலையில் இன்று இன்னொரு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 69.72 சதவீத வாக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதியான வாக்கு சதவீத பட்டியல் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலின்படி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:

திருவள்ளூர் (தனி) 68.59
வடசென்னை 60.10
தென் சென்னை 54.17
மத்திய சென்னை 53.96
ஸ்ரீபெரும்புதூர் 60.25
காஞ்சிபுரம் (தனி) 71.68
அரக்கோணம் 74.19
வேலூர் 73.53
கிருஷ்ணகிரி 71.50
தர்மபுரி 81.20
திருவண்ணாமலை 74.24
ஆரணி 75.76
விழுப்புரம் (தனி) 76.22
கள்ளக்குறிச்சி 79.21
சேலம் 78.16
நாமக்கல் 78.21
ஈரோடு 70.59
திருப்பூர் 70.62
நீலகிரி (தனி) 70.95
கோயம்புத்தூர் 64.89
பொள்ளாச்சி (தனி) 70.41
திண்டுக்கல் 71.14
கரூர் 78.60
திருச்சிராப்பள்ளி 67.51
பெரம்பலூர் 77.43
கடலூர் 72.57
சிதம்பரம் (தனி) 76.37
மயிலாடுதுறை 70.09
நாகப்பட்டினம் (தனி) 71.94
தஞ்சாவூர் 68.27
சிவகங்கை 64.26
மதுரை 62.04
தேனி 59.84
விருதுநகர் 70. 22
ராமநாதபுரம் 68.19
தூத்துக்குடி 66.88
தென்காசி (தனி) 67.65
திருநெல்வேலி 64.10
கன்னியாகுமரி 65.44
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}