- வே.தங்கப்பிரியா
சென்னை: வாட்ஸ்ஆப் போன்ற பிரபல சாட் தளங்களுக்கு போட்டியாக பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக 'X-சாட்' என்ற புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியிருப்பது எலான் மஸ்க்கின் எக்ஸ் தளமேதான்.
எலான் மஸ்க் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், X-சாட்டை எல்லாவற்றிற்கும் பயன்படுத்தும் செயலியாக உருவாக்குவது தன் இலக்கு. X-சாட் ஐ மற்ற தளங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம்.
வாட்ஸ் ஆப்பில் நம் தகவல்களை அனைவரும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஆனால் X-சாட் ல் நம் தனிப்பட்ட விஷயங்களை யாராலும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க இயலாது. அதையும் மீறி யாராவது ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயன்றால் அது குறித்து அனுப்பியவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதியையும் இயக்க முடியும்.

மேலும் X-சாட் நம் தனிப்பட்ட மற்றும் குரூப் சேட்கள் "என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் "(E2EE என்றும் சொல்லலாம்) மூலம் பாதுகாக்கப்படுகிறது. X-சாட்டின் இன்னொரு சிறப்பு அம்சமாக கருதப்படுவது அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஆகியோரை தவிர வேறு யாராலும் X-சாட் நிறுவனம் உட்பட நம் தகவல்களை அணுக முடியாது. வாட்ஸ் அப் நிறுவனத்திடம் நம் தகவல்கள் அனைத்தும் இருக்கும்.
வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் அனுப்பிய மெசேஜ்களை எடிட் மற்றும் நீக்கம் (டெலிட்) செய்யலாம். அதில் ஒரு மெசேஜ் நீக்கப்பட்டால் இந்த மெசேஜ் நீக்கப்பட்டது என்ற குறிப்பு வரும். ஆனால் X-சாட் ல் நீக்கப்பட்ட மெசேஜ்கள் எந்த தடயமும் இல்லாமல் முற்றிலும் மறைந்து விடும். இது ஒரூ தனிப்பட்ட பாதுகாப்பு உரிமையை அனைவருக்கும் கொடுக்கும் விதத்தில் உள்ளது.
வாட்ஸ் ஆப்பில் விளம்பரங்கள் வருவது போல X-சாட் ல் விளம்பரங்களோ, ட்ராக்கிங் செயல்பாடுகளோ இருக்காது என மஸ்க் உறுதி அளித்துள்ளார். பழைய மற்றும் புதிய X-சாட் செய்திகள் அனைத்தும் ஒரே இன்பாக்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குரல் குறிப்புகள் அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.X-சாட் தற்போது IOS பயனர்களுக்கும் மற்றும் வெப் வழியாகவும் X தளத்தின் DMc பிரிவில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கான வெளியீடு விரைவில் வரும் என X சாட் நிறுவனம் அறிவித்துள்ளது.
(வே. தங்கப்பிரியா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}