சேலம் : கட்சிக்கு துரோகம் செய்தால் இது தான் நிலைமை. கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என அதிமுக.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை நேற்று அறிவித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்ததுடன் தான் மனவேதனையில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததுடன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், கட்சிக்கு துரோகம் செய்தால் இது தான் நிலைமை. கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டோர் அதிமுக குறித்து பேச அருகதை இல்லை. ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலில் திமுக.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே இவர்களின் நோக்கம்.
திமுக.,விற்கு ஆதரவாக தான் செங்கோட்டையன் செயல்படுகிறார். பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டோருடன் இணைந்து செயல்பட்டதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இருக்கும் வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் தினகரன். கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிராக இருந்தார் செங்கோட்டையன். திமுக.,வின் பி டீமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன் என செங்கோட்டையனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}