தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

Jul 26, 2025,05:13 PM IST

சென்னை : தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு முதல் முறையாக தமிழகம் வரும் பிரதமரை இபிஎஸ் சந்திக்க உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, இன்று தமிழ்நாடு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி, மாலத்தீவில் இருந்து நேரடியாக தூத்துக்குடிக்கு இன்று இரவு 7:50 மணிக்கு தனி விமானத்தில் வருகிறார். சுமார் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். 




தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் தொடங்கி வைக்கிறார். இதில் ரயில்வே துறை (ரூ.1,030 கோடி), நெடுஞ்சாலைத் துறை (ரூ. 2,571 கோடி) மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் பரிமாற்ற அமைப்பு (ரூ. 548 கோடி) போன்ற திட்டங்கள் அடங்கும். விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். தூத்துக்குடி வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தூத்துக்குடி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தனி விமானம் மூலம் திருச்சிக்கு இரவு 10:30 மணியளவில் வந்து பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். ஜூலை 27 அன்று, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2:25 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுகிறார்.


கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழக முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், தமிழக அரசு சார்பில் துணை முதல்வர், மூத்த அமைச்சர் சென்று பிரதமர் மோடியை வரவேற்க வாய்ப்புள்ளது. அவர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தமிழகம் வரும் பிரதமரை வரவேற்கவும், வழியனுப்பவும் தனக்கு அனுமதி அளிக்கும் படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு அனமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்