பெங்களூர்: கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணா (92) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வருமா எம் எஸ் கிருஷ்ணா பெங்களூரை சிறந்த தொழில்நுட்ப நகரமாக மாற்ற தனது முக்கிய பங்களிப்பை கொடுத்தவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் ஹைடெக் நகராக பெங்களூர் மாறி ஐடி துறையில் இந்தியாவின் தலைநகராக உருவெடுத்தது. கடந்த 1999 முதல் 2004 இந்த வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார். அந்த சமயத்தில்தான் சந்தன கடத்தல் வீரப்பன் கர்நாடகா சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாரை கடத்திய சம்பவம் நடந்தேறியது.
முதல்வராக, மத்திய அமைச்சராக பல்வேறு பதவிகளை வகித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு மத்திய பாஜக அரசு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.
பெங்களூரில் வசித்து வந்த முன்னாள் முதல்வர் எம் எஸ் கிருஷ்ணாவுக்கு தற்போது வயது 92. கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனளிக்காததால் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலேயே இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
{{comments.comment}}