கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா மறைவு.. பெங்களூரை உலக நாயகன் ஆக மாற்றிய பெருமைக்குரியவர்

Dec 10, 2024,05:50 PM IST

பெங்களூர்: கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணா (92) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வருமா எம் எஸ் கிருஷ்ணா பெங்களூரை சிறந்த தொழில்நுட்ப நகரமாக மாற்ற தனது  முக்கிய பங்களிப்பை கொடுத்தவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் ஹைடெக் நகராக பெங்களூர் மாறி ஐடி துறையில் இந்தியாவின் தலைநகராக உருவெடுத்தது.  கடந்த 1999 முதல் 2004 இந்த வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார். அந்த சமயத்தில்தான் சந்தன கடத்தல் வீரப்பன் கர்நாடகா சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாரை கடத்திய சம்பவம் நடந்தேறியது.




முதல்வராக, மத்திய அமைச்சராக பல்வேறு பதவிகளை வகித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு மத்திய பாஜக அரசு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.


பெங்களூரில் வசித்து வந்த முன்னாள் முதல்வர் எம் எஸ் கிருஷ்ணாவுக்கு தற்போது வயது 92. கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனளிக்காததால் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலேயே இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

news

இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்‌.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

news

பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை

news

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

news

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!

news

அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!

news

வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்

news

2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்