கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா மறைவு.. பெங்களூரை உலக நாயகன் ஆக மாற்றிய பெருமைக்குரியவர்

Dec 10, 2024,05:50 PM IST

பெங்களூர்: கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணா (92) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வருமா எம் எஸ் கிருஷ்ணா பெங்களூரை சிறந்த தொழில்நுட்ப நகரமாக மாற்ற தனது  முக்கிய பங்களிப்பை கொடுத்தவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் ஹைடெக் நகராக பெங்களூர் மாறி ஐடி துறையில் இந்தியாவின் தலைநகராக உருவெடுத்தது.  கடந்த 1999 முதல் 2004 இந்த வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார். அந்த சமயத்தில்தான் சந்தன கடத்தல் வீரப்பன் கர்நாடகா சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாரை கடத்திய சம்பவம் நடந்தேறியது.




முதல்வராக, மத்திய அமைச்சராக பல்வேறு பதவிகளை வகித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு மத்திய பாஜக அரசு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.


பெங்களூரில் வசித்து வந்த முன்னாள் முதல்வர் எம் எஸ் கிருஷ்ணாவுக்கு தற்போது வயது 92. கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனளிக்காததால் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலேயே இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்