கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா மறைவு.. பெங்களூரை உலக நாயகன் ஆக மாற்றிய பெருமைக்குரியவர்

Dec 10, 2024,05:50 PM IST

பெங்களூர்: கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணா (92) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வருமா எம் எஸ் கிருஷ்ணா பெங்களூரை சிறந்த தொழில்நுட்ப நகரமாக மாற்ற தனது  முக்கிய பங்களிப்பை கொடுத்தவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் ஹைடெக் நகராக பெங்களூர் மாறி ஐடி துறையில் இந்தியாவின் தலைநகராக உருவெடுத்தது.  கடந்த 1999 முதல் 2004 இந்த வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார். அந்த சமயத்தில்தான் சந்தன கடத்தல் வீரப்பன் கர்நாடகா சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாரை கடத்திய சம்பவம் நடந்தேறியது.




முதல்வராக, மத்திய அமைச்சராக பல்வேறு பதவிகளை வகித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு மத்திய பாஜக அரசு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.


பெங்களூரில் வசித்து வந்த முன்னாள் முதல்வர் எம் எஸ் கிருஷ்ணாவுக்கு தற்போது வயது 92. கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனளிக்காததால் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலேயே இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்