ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்குதேசம் - பவன் கல்யாண் - பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளிடையே கடும் போட்டா போட்டி நிலவுவதாகவும் பல்வேறு எக்சிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.
ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலுடன் இணைத்து லோக்சபா தேர்தலும் நடந்தது. அங்கு தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் - பவன் கல்யாண்- பாஜக இணைந்து அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் தனி அணியாக போட்டியிட்டது.
ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றும் என்று பல்வேறு கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்தியா டிவி கணிப்பின்படி தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 முதல் 15 சீட் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 4 முதல் 6 சீட் வரையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 சீட் வரை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 2 சீட் வரை கிடைக்குமாம்.
டுடேஸ் சாணக்கியா கணிப்பின்படி பார்த்தால், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 22 சீட் வரை கிடைக்குமாம். ஜெகன் மோகன் கட்சிக்கு 3 சீட் வரை கிடைக்கலாமாம். மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை.
தெலுங்கானா
தெலங்கானாவைப் பொறுத்தவரை போட்டா போட்டி நிலவுகிறது. ஏபிபி சிவோட்டர் கணிப்பில், பாஜக (7-9) காங்கிரஸ் (7-9) மற்றவை (1) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தியம் டிவி கணிப்பில், பாஜக (1-5) காங்கிரஸ் (7-10) பாரதிய ராஷ்டிரியி சமிதி (2-6) ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 1 முதல் 2 சீட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுடேஸ் சாணக்கியாவின் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 12 சீட் வரையும், காங்கிரஸ் கூட்டணிக்கு 5 சீட்டுகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஆர்எஸ் கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்காதாம்.
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}