டெல்லி: அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிதல்ல. ஏற்கனவே நடந்துள்ளதுதான். மேலும் அவர்கள் நாட்டு சட்டப்படியே கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளனர். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு கைவிலங்கு போடப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு கொண்டு வரப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதைக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்தது. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு பிற்பகலில் அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் ஒரு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் இந்தியர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்துடன் மத்திய அரசு பேசி வருகிறது. நேற்றைய சம்பவத்தில் ஆண்கள் மட்டுமே கைவிலங்கிடப்பட்டது தெரிய வந்துள்ளது. அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு அப்படிப் போடப்படவில்லை.
அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை சார்பில் நாடு கடத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வழக்கமாக நடைபெறுவதுதான். விமானம் மூலமாக சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறது அமெரிக்கா. கடந்த 2012ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. அவர்கள் நாட்டுச் சட்டப்படி கைவிலங்கிடுகிறார்கள். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு பயண நேரமான 10 மணி நேரமும் உரிய உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. டாய்லெட் செல்ல விரும்புவோருக்கு அந்த சமயத்தில் கைவிலங்குகள் தளர்த்தப்பட்டுள்ளன. ராணுவ விமானத்தில் கொண்டு வரப்பட்டதால் மட்டுமல்ல, சாதாரண சிவில் விமானங்களில் அழைத்து வரப்பட்டாலும் கூட இதே விதிமுறைகளைத்தான் அமெரிக்கா கையாளுகிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
மஞ்சள் மாநகரம் ஈரோடு மாநகரின் மாபெரும் பெரிய மாரியம்மன் திருவிழா
தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
என்ன சொல்றீங்க?...ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}