நாடு கடத்துவது புதிதல்ல.. சட்டப்படியே இந்தியர்களுக்கு கை விலங்கு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

Feb 06, 2025,06:47 PM IST

டெல்லி: அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிதல்ல. ஏற்கனவே நடந்துள்ளதுதான். மேலும் அவர்கள் நாட்டு சட்டப்படியே கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளனர். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு கைவிலங்கு போடப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.


அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு கொண்டு வரப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதைக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்தது. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, வெளியுறவு  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 




அதன் பிறகு பிற்பகலில் அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் ஒரு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் இந்தியர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்துடன் மத்திய அரசு பேசி வருகிறது. நேற்றைய சம்பவத்தில் ஆண்கள் மட்டுமே கைவிலங்கிடப்பட்டது தெரிய வந்துள்ளது. அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு அப்படிப் போடப்படவில்லை.


அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை சார்பில் நாடு கடத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வழக்கமாக நடைபெறுவதுதான். விமானம் மூலமாக சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறது அமெரிக்கா. கடந்த 2012ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது.  அவர்கள் நாட்டுச் சட்டப்படி கைவிலங்கிடுகிறார்கள். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு பயண நேரமான 10 மணி நேரமும் உரிய உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. டாய்லெட் செல்ல விரும்புவோருக்கு அந்த சமயத்தில் கைவிலங்குகள் தளர்த்தப்பட்டுள்ளன. ராணுவ விமானத்தில் கொண்டு வரப்பட்டதால் மட்டுமல்ல, சாதாரண சிவில் விமானங்களில் அழைத்து வரப்பட்டாலும் கூட இதே விதிமுறைகளைத்தான் அமெரிக்கா கையாளுகிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்

news

நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்

news

திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?

news

பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு

news

ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

news

எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்