நாடு கடத்துவது புதிதல்ல.. சட்டப்படியே இந்தியர்களுக்கு கை விலங்கு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

Feb 06, 2025,06:47 PM IST

டெல்லி: அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிதல்ல. ஏற்கனவே நடந்துள்ளதுதான். மேலும் அவர்கள் நாட்டு சட்டப்படியே கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளனர். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு கைவிலங்கு போடப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.


அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு கொண்டு வரப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதைக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்தது. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, வெளியுறவு  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 




அதன் பிறகு பிற்பகலில் அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் ஒரு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் இந்தியர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்துடன் மத்திய அரசு பேசி வருகிறது. நேற்றைய சம்பவத்தில் ஆண்கள் மட்டுமே கைவிலங்கிடப்பட்டது தெரிய வந்துள்ளது. அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு அப்படிப் போடப்படவில்லை.


அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை சார்பில் நாடு கடத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வழக்கமாக நடைபெறுவதுதான். விமானம் மூலமாக சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறது அமெரிக்கா. கடந்த 2012ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது.  அவர்கள் நாட்டுச் சட்டப்படி கைவிலங்கிடுகிறார்கள். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு பயண நேரமான 10 மணி நேரமும் உரிய உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. டாய்லெட் செல்ல விரும்புவோருக்கு அந்த சமயத்தில் கைவிலங்குகள் தளர்த்தப்பட்டுள்ளன. ராணுவ விமானத்தில் கொண்டு வரப்பட்டதால் மட்டுமல்ல, சாதாரண சிவில் விமானங்களில் அழைத்து வரப்பட்டாலும் கூட இதே விதிமுறைகளைத்தான் அமெரிக்கா கையாளுகிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. யாரும் தப்ப முடியாது.. முதல்வர் மு க ஸ்டாலின்

news

வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்.. தமிழ்நாட்டில் இன்று முதல் 25ஆம் தேதி வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai corporation budget: ரூ.5,145.52 கோடி பட்ஜெட்.. மேயர் பிரியா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுங்கள்.. அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

news

நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

news

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்க: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

news

Chennai MTC.. ஏசி பஸ் உட்பட அனைத்து பேருந்துகளிலும்.. இனி ரூ.2000/- மாதாந்திர சலுகை பாஸ்!

news

தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

news

முடிந்தது 9 மாத தவிப்பு.. தரையிறங்கிய டிராகன்.. புன்னகையுடன் பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்