- மஞ்சுளா தேவி
சென்னை: மிச்சாங் புயலின் கண் பகுதி சென்னைக்கு அருகே இருப்பதால்தான் பெருமழை பெய்து வருவதாகவும், அதனால்தான் இது கடந்து செல்ல இரவு நேரம் வரை ஆகும் எனவும் கூறப்படுகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது ஆந்திராவில் கரையைக் கடக்கும் போது அதிதீவிரப் புயலாக வலுப்பெறும். அப்போது மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும். மிச்சாங் புயல் நாளை நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் .
இந்நிலையில் புயலின் கண் பகுதி சென்னைக்கு அருகே இருப்பதால்தான் பெருமழை பெய்து வருவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மிச்சாங் புயல் சென்னையை கடந்து செல்ல இரவு வரையாகும். இந்த புயல் நெல்லூர் பகுதியை கடந்த பின்னரே சென்னைக்கும் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளன.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ,ஆகிய மாவட்டங்களில் ஒரே மாதிரியான கனமழையை எதிர்ப்பார்க்கலாம் . மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ஆற்று நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இயல்பை விட 29 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ள நிலையில், இன்னும் 45 சதவீதம் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மணி 4ஐத் தாண்டியும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்னும் மழை விடவில்லை. நேற்று இரவு ஆரம்பித்த மழை இது. வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை பெய்து வருவதால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
நாராயணபுரம் ஏரி உடைந்தது
சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நாராயணபுரம் ஏரி நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் பள்ளிக்கரணை பகுதி குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சி அளிக்கின்றது. இதனால் அடுக்குமாடி பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களின் பல கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
ஏரியையை ஒட்டி உள்ள பூர்வங்கரா என்ற அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் நீரில் மூழ்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
தண்ணீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்பதால் பாம்பு, பூரான் போன்ற ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் எச்சரித்துள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!
விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
{{comments.comment}}