டெல்லி: நவராத்தியில் இருந்து தீபாவளி வரையிலான நாட்களில், டாடா நிறுவனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்துள்ளது.
நவராத்திரிக்கும், தீபாவளிக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 1 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது டாடா நிறுவனம். பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி குறைப்பால் சந்தையில் டாடா நிறுவன பங்குகளும் உயர்ந்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 33 சதவீத வளர்ச்சியாகும்.
டாடா மோட்டர்ஸ் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 33 சதவீதம் விற்பனையுடன், புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் MD-யும், CEO-வும் ஆன சைலேஷ் சந்திரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நவராத்திரி முதல் தீபாவளி வரையான 30 நாட்களில், 1 லட்சத்திற்கும் அதிகமானவாகனங்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும், SUV-வில் Nexon, 38 ஆயிரம் யூனிட்கள் விற்பனையுடன் 73 சதவீதம் வளர்ச்சியும், Punch 32 ஆயிரம் யூனிட்களுடன் 29 சதவீதம் வளர்ச்சியும் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மின்சார வாகனங்கள் பிரிவிலும் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையுடன் 37 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்
சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!
டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!
தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!
மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)
குருவிக்கூடு!
{{comments.comment}}