சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!

Apr 28, 2026,02:51 PM IST

- அ.தாமஸ்


உழைப்பவன் ஓய்வை மறுக்கிறான்; ஓய்வில் இருப்பவனோ உழைப்பை வெறுக்கிறான். 


உழைப்பவன் உழைப்பின் மீது கொண்ட நேசத்தால் உணவை மறந்து உழைப்பதால் எடை குறைந்து நடைதளர்கிறது. காலம் கடந்தே உணர்கிறான் உழைக்க உணவு தேவை என்று.


ஓய்வை ரசிப்பவனும் உழைப்பின் உன்னதம் அறிந்ததாலோ உண்பதைக் கூட உயரிய உழைப்பு எனக் கருதி உழைப்பதிலும் மேலாய் உண்பதிலே நாட்டம் கொள்கிறான். 


ஓய்வில்லாமல் உழைப்பதும் உழைப்பில்லாமல் உண்பதும் உடலுக்கும் மனதிற்கும் பேராபத்தையே தருவிக்கும்.




உழைப்பவன் உண்ணும் நேரத்தை ஓய்வெனக் கருதுகிறான். ஓய்வில் இருப்பவனோ உண்பதையே உழைப்பெனக் கருதுகிறான். 


உழைப்புக்கேற்ற ஓய்வும், உணவும் எந்த அளவிற்கு அவசியமோ அதேபோல் ஓய்விற்கேற்ற  உழைப்பும்,உணவும் அவசியம். 


உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம் என்பதை உணர்ந்து உண்போம், உழைப்போம் தேவைக்கு ஓய்வோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்