சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!

Apr 28, 2026,02:51 PM IST

- அ.தாமஸ்


உழைப்பவன் ஓய்வை மறுக்கிறான்; ஓய்வில் இருப்பவனோ உழைப்பை வெறுக்கிறான். 


உழைப்பவன் உழைப்பின் மீது கொண்ட நேசத்தால் உணவை மறந்து உழைப்பதால் எடை குறைந்து நடைதளர்கிறது. காலம் கடந்தே உணர்கிறான் உழைக்க உணவு தேவை என்று.


ஓய்வை ரசிப்பவனும் உழைப்பின் உன்னதம் அறிந்ததாலோ உண்பதைக் கூட உயரிய உழைப்பு எனக் கருதி உழைப்பதிலும் மேலாய் உண்பதிலே நாட்டம் கொள்கிறான். 


ஓய்வில்லாமல் உழைப்பதும் உழைப்பில்லாமல் உண்பதும் உடலுக்கும் மனதிற்கும் பேராபத்தையே தருவிக்கும்.




உழைப்பவன் உண்ணும் நேரத்தை ஓய்வெனக் கருதுகிறான். ஓய்வில் இருப்பவனோ உண்பதையே உழைப்பெனக் கருதுகிறான். 


உழைப்புக்கேற்ற ஓய்வும், உணவும் எந்த அளவிற்கு அவசியமோ அதேபோல் ஓய்விற்கேற்ற  உழைப்பும்,உணவும் அவசியம். 


உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம் என்பதை உணர்ந்து உண்போம், உழைப்போம் தேவைக்கு ஓய்வோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்