வங்கதேச மக்களுக்காக... 17 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கிய முன்னாள் பிரதமரின் மகன்!

Dec 26, 2025,02:09 PM IST

கலைவாணி கோபால்


டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரகுமான் 17 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாய்நாடு திரும்பியுள்ளார்.


வங்கதேசம் தொடர்ந்து வன்முறைக்காலமாக மாறிய வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வங்கதேசத்தின் மாணவ அமைப்பின் தலைவர் செரிப் உஸ்மான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இந்துக்களுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஆன காலிதா ஜியாவின் மகன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயகமான வங்கதேசத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். 


பிரதமர் ஷேக் அசினா கொலை செய்ய முயன்றதாகவும், பல்வேறுகள் மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவரின் பேரில் நிறைய வழக்குகள் போடப்பட்டு அவர் சில காலம் லண்டனில் தஞ்சம்மடைந்து இருந்தார். தற்போது வங்கதேசத்தில் நடக்கும் வன்முறை சூழலில்,  அவர் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பியது தேர்தல் காலத்தில் திருப்புமுனையாக இருக்கும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது. 




முதலில் எவர் கேர் மருத்துவமனையில் உள்ள அவருடைய தாயை சந்தித்த பிறகு, அவருடைய அரசியல் கருத்துக்களை மக்களிடம் பதிவு செய்துள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கதேசமானது கிறிஸ்தவர்கள், இந்தியர்கள், முஸ்லிம்கள் , பௌத்தர்கள் என அனைவருக்கும் சொந்தமானது. அது மட்டுமல்லாமல் வங்கதேச மக்களிடம் ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர முயல்வேன் என்றும் ஒவ்வொரு பெண்ணும் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை அவருடைய குடும்பமும் அவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார். 


வரும் டிசம்பர் 27 ஆம் தேதி அவர் தனது வாக்காளர் அடையாளத்தை பதிவு செய்வார் என்றும், பிப்ரவரி 12 நடக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாரிக் ரகுமானின் கருத்துக்களும், அவரின் பேச்சும் மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் திசை திருப்பத்தையும் தந்துள்ளது.


(கலைவாணி கோபால் தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்

news

இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

news

அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?

news

செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு

news

உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி

news

உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!

news

கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...

news

சூர்யா - ஜோதிகாவின் ரூ.200 கோடி ஆடம்பர பங்களா பற்றி இதெல்லாம் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்