டெல்லி: ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். ஆனால் 8 வருடமாக இதைச் செய்யாமல் இப்போது திடீரென செய்ததற்கு என்ன காரணம் என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. சாமானிய மக்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைப் பலரும் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:
ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பொருட்கள், சேவைகளுக்கான வரிக் குறைப்பு ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கைதான், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது.
தற்போதுள்ள ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்றைய தேதி வரை நடைமுறையில் இருந்த வரிகள், ஆரம்பத்திலிருந்தே அமல்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாகவே, ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் வரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்த சங்காகவே ஆகிவிட்டது.
இந்த மாற்றங்களைச் செய்ய அரசைத் தூண்டியது எது என்பதை ஊகிப்பது சுவாரசியமாக இருக்கும்:
பொருளாதார மந்தநிலை?
குடும்பக் கடன் அதிகரிப்பு?
குடும்பச் சேமிப்பு குறைந்தது?
பீகார் தேர்தல்?
ட்ரம்ப் மற்றும் அவரது வரிகள்?
அல்லது மேற்சொன்ன அனைத்துமே?
Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}