டெல்லி: ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். ஆனால் 8 வருடமாக இதைச் செய்யாமல் இப்போது திடீரென செய்ததற்கு என்ன காரணம் என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. சாமானிய மக்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைப் பலரும் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:

ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பொருட்கள், சேவைகளுக்கான வரிக் குறைப்பு ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கைதான், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது.
தற்போதுள்ள ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்றைய தேதி வரை நடைமுறையில் இருந்த வரிகள், ஆரம்பத்திலிருந்தே அமல்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாகவே, ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் வரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்த சங்காகவே ஆகிவிட்டது.
இந்த மாற்றங்களைச் செய்ய அரசைத் தூண்டியது எது என்பதை ஊகிப்பது சுவாரசியமாக இருக்கும்:
பொருளாதார மந்தநிலை?
குடும்பக் கடன் அதிகரிப்பு?
குடும்பச் சேமிப்பு குறைந்தது?
பீகார் தேர்தல்?
ட்ரம்ப் மற்றும் அவரது வரிகள்?
அல்லது மேற்சொன்ன அனைத்துமே?
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}