டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிகாம்போத் காட் பகுதியில் நடந்த இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் ஏழு நாள் தூக்கம் அனுசரி படுகிறது. அதேபோல் காங்கிரஸ் சார்பிலும் ஏழு நாட்கள் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இன்று மன்மோகன் சிங் உடல் காலை அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக மன்மோகன் சிங் உடல் உடல் தகனம் நடைபெறவுள்ள நிகாம்போத் காட் பகுதிக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தியும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பொருளாதார பிதாமகருக்கு நாடு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}