டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிகாம்போத் காட் பகுதியில் நடந்த இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் ஏழு நாள் தூக்கம் அனுசரி படுகிறது. அதேபோல் காங்கிரஸ் சார்பிலும் ஏழு நாட்கள் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இன்று மன்மோகன் சிங் உடல் காலை அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக மன்மோகன் சிங் உடல் உடல் தகனம் நடைபெறவுள்ள நிகாம்போத் காட் பகுதிக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தியும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பொருளாதார பிதாமகருக்கு நாடு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை
போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை
{{comments.comment}}