டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிகாம்போத் காட் பகுதியில் நடந்த இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் ஏழு நாள் தூக்கம் அனுசரி படுகிறது. அதேபோல் காங்கிரஸ் சார்பிலும் ஏழு நாட்கள் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இன்று மன்மோகன் சிங் உடல் காலை அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக மன்மோகன் சிங் உடல் உடல் தகனம் நடைபெறவுள்ள நிகாம்போத் காட் பகுதிக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தியும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பொருளாதார பிதாமகருக்கு நாடு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}