மதுரை: அண்ணாமலை இல்லாமல் தமிழநாடு அமைதியாக இருக்கிறது. அவரை எப்படி அனுப்புவது என்று தலைமை தவித்துக்கொண்டிருக்கிறது போல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர் பேசுகையில், பாஜக மாநில தலைவரை எப்படி அனுப்புவது என்று தலைமை தவித்துக்கொண்டிருக்கிறது போல. இப்பொழுது தமிழநாடு அமைதியாக இருக்கிறது போன்று தெரிகிறது. தமிழக பாஜகவில் தற்போது பொறுப்பேற்றுள்ளவர் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். இது உண்மையில் பாஜக தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் பிரச்சனை கல்விக்கு கூட நிதி வாங்க முடியாத கையாலாகாத நிலைமை நாம் பார்க்கிறோம். அதற்கு நிபந்தனைகள் விதிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரும் கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், மத்தியில் இருக்கும் அரசு தருவதாக தெரியவில்லை. நேற்று கூட கல்வி அமைச்சர் இதில் அரசியல் சாயம் பூசக்கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.
எது எப்படி இருந்தாலும் மாணவர்களுக்கு நிதி இல்லாமல் கல்வி கற்கக்கூடிய புனிதப் பணி தடைப்பட்டு விடக்கூடாது. மத்தியில் ஆளுகின்ற கட்சி மாநிலத்திலும் ஆளுகின்ற கட்சி இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பழி சுமத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் பள்ளி கல்வித்துறைக்கும் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி கவலையோடு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி ஜில் ஜில் கிளைமேட் தான்.. தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்குமாம்.. வானிலை மையம் கணிப்பு..!
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியாகிறது.. ஆர்வத்தில் மாணவர்கள்!
IPL 2026.. CSKவில் யாருக்கெல்லாம் கெட் அவுட்.. யாரெல்லாம் நீடிப்பாங்க?.. A quick analysis!
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்.. நாளை போர்க்கால ஒத்திகை.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவுடன் மோதல் போக்கு.. பாகிஸ்தான் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.. மூடிஸ் எச்சரிக்கை
நுங்கு சாப்பிடலையோ நுங்கு.. வந்தாச்சு சீசன்.. வாங்கி சாப்பிட்டு ஜில்லுன்னு இருங்க!
இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!
தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில்.. டமால் டுமீலுடன் மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
கொளுத்தும் கோடை காலத்தில்.. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன குடிக்கலாம்..?