சென்னை: மறைந்த அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மேலாளராக இருந்து, திரைப்படத் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, அமைச்சராக பொறுப்பு வகித்த மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் வயோதிகம் காரணமா இன்று காலமானார்.
98 வயதாகும் ஆர்.எம். வீரப்பன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என அனைத்துத் திராவிடத் தலைவர்களுடனும் நெருக்கமாக பழகியவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர். திராவிட இயக்க தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். 1953ம் ஆண்டில் எம்ஜஆர் நாடக மன்றம் மற்றும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர். இதன் பின்னர் 1963ம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை துவங்கினார்.

சத்யா மூவிஸ் நிறுவனத்தின் மூலமாக ஏகப்பட்ட எம்ஜிஆர் படங்களைத் தயாரித்துள்ளார். பின்னாளில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களையும் தயாரித்துள்ளார்.
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது அவருடன் இணைந்து செயல்பட்டார் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தபோது, எம்ஜிஆர் மனைவி விஎன்.ஜானகியை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதன் பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நல்லிணக்கம் காரணமாக அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்தார். 2 முறை சட்டப்பேரவைக்கும், 3 முறை சட்ட மேலவைக்கும் ஆர்.எம்.வீரப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்.எம்.வீரப்பன் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}