டில்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் இன்று காலமானார். அவருக்கு வயது 92. இவரது மறைவை அடுத்து காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலரும் டில்லி விரைந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் அவருக்கு ஐசியு.,வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. டாக்டர்கள் குழு அவருக்கு பல விதமான மருத்துவ பரிசோதனைகள் எடுத்து, சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக சொல்லப்பட்டது.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். பாஜக தேசிய தலைவர் நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார். தலைவர்கள் வருகையை அடுத்து எய்ம் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்பட்டது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்மோகன் சிங் உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டில்லி விரைந்து வருகின்றனர்.
இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்ற மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமை சட்டம், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதி திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும்.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் ஆட்சி காலத்தில் மத்திய நிதியமைச்சராகவும் மன்மோகன் சிங் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. தலைமை பொருளாதார ஆலோசகர், ஆர்பிஐ கவர்னர், திட்ட கமிஷன் துணை தலைவர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்து, பொருளாதார மேதை என அனைவராலும் புகழப்பட்டவர் மன்மோகன் சிங்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வங்க கடலில் மே 27ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!
அமலாக்கத்துறையின் டாஸ்மாக் ரெய்டுகள்.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. இடைக்காலத் தடை
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்.. 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: எம்.பி. சு.வெங்கடேசன்
தனுஷின் புதிய படத்திற்கு என்ன பெயர் தெரியுமா..?
அரபிக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
கிவி (KIWI) பழத்தில் குவிந்து கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. விலையும் ஜாஸ்தி.. பலனும் அதிகம்!
ஆர்பிஐ விதிமுறைகளை திரும்பப் பெறுக.. அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்..!
{{comments.comment}}