புத்திலிபாய் புதல்வனாய்
போர்பந்தரின் பொக்கிஷமாய்
பாரிசில் பட்டம் பெற்று
பாரதத்தைப் பாங்காய் அமைத்து
வந்தே மாதரம் என முழங்கி
வந்த வெள்ளையனை விரட்டியடித்து
கஸ்தூரி பாய்
கரம் பிடித்து
கஷ்டங்கள் யாவையும்
களைந்தெடுத்து
அகிம்சை ஆடையை மேலணிந்து
இம்சைத் தோலின் இடர்களைந்து
எளிமையின் அழகாய் உருமாறி
ஏழையின் அன்பில் கருவாகி
எதிரியையும் நண்பனாய் நோக்கி
அகிம்சையை மட்டுமே ஆயுதமாக்கி
சட்டையும் துறந்து
சமத்துவம் கொண்டு
நித்தமும் இந்தியன் என்ற
நிதர்சன கௌரவம் கொண்டு
சத்தியமேவ ஜெயதே என்று
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து
கதராடை உடுத்தி காட்சி தந்து
கடைக்கோடி இந்தியனுக்கும்
மாட்சி தந்து
எளிய வாழ்வு வாழ்ந்து
ஏற்றம் கண்டு
என்றென்றும் எங்கள் மனதில் வசிக்கும் மகாத்மாவே!
அகிலத்தில் உயர்ந்து
தேசத்திற்குத் தந்தையாகிப்
பணத்தில் தலைபதித்து
பாரதத்தில்
மகாத்மாவான உம்மை
வணங்கிப் போற்றிடுவோம்!
ஜெய்ஹிந்த்!
இனிய
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}