புத்திலிபாய் புதல்வனாய்
போர்பந்தரின் பொக்கிஷமாய்
பாரிசில் பட்டம் பெற்று
பாரதத்தைப் பாங்காய் அமைத்து
வந்தே மாதரம் என முழங்கி
வந்த வெள்ளையனை விரட்டியடித்து
கஸ்தூரி பாய்
கரம் பிடித்து
கஷ்டங்கள் யாவையும்
களைந்தெடுத்து
அகிம்சை ஆடையை மேலணிந்து
இம்சைத் தோலின் இடர்களைந்து
எளிமையின் அழகாய் உருமாறி
ஏழையின் அன்பில் கருவாகி
எதிரியையும் நண்பனாய் நோக்கி
அகிம்சையை மட்டுமே ஆயுதமாக்கி
சட்டையும் துறந்து
சமத்துவம் கொண்டு
நித்தமும் இந்தியன் என்ற
நிதர்சன கௌரவம் கொண்டு
சத்தியமேவ ஜெயதே என்று
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து
கதராடை உடுத்தி காட்சி தந்து
கடைக்கோடி இந்தியனுக்கும்
மாட்சி தந்து
எளிய வாழ்வு வாழ்ந்து
ஏற்றம் கண்டு
என்றென்றும் எங்கள் மனதில் வசிக்கும் மகாத்மாவே!
அகிலத்தில் உயர்ந்து
தேசத்திற்குத் தந்தையாகிப்
பணத்தில் தலைபதித்து
பாரதத்தில்
மகாத்மாவான உம்மை
வணங்கிப் போற்றிடுவோம்!
ஜெய்ஹிந்த்!
இனிய
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}