
புத்திலிபாய் புதல்வனாய்
போர்பந்தரின் பொக்கிஷமாய்
பாரிசில் பட்டம் பெற்று
பாரதத்தைப் பாங்காய் அமைத்து
வந்தே மாதரம் என முழங்கி
வந்த வெள்ளையனை விரட்டியடித்து
கஸ்தூரி பாய்
கரம் பிடித்து
கஷ்டங்கள் யாவையும்
களைந்தெடுத்து
அகிம்சை ஆடையை மேலணிந்து
இம்சைத் தோலின் இடர்களைந்து
எளிமையின் அழகாய் உருமாறி
ஏழையின் அன்பில் கருவாகி
எதிரியையும் நண்பனாய் நோக்கி
அகிம்சையை மட்டுமே ஆயுதமாக்கி
சட்டையும் துறந்து
சமத்துவம் கொண்டு
நித்தமும் இந்தியன் என்ற
நிதர்சன கௌரவம் கொண்டு
சத்தியமேவ ஜெயதே என்று
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து
கதராடை உடுத்தி காட்சி தந்து
கடைக்கோடி இந்தியனுக்கும்
மாட்சி தந்து
எளிய வாழ்வு வாழ்ந்து
ஏற்றம் கண்டு
என்றென்றும் எங்கள் மனதில் வசிக்கும் மகாத்மாவே!
அகிலத்தில் உயர்ந்து
தேசத்திற்குத் தந்தையாகிப்
பணத்தில் தலைபதித்து
பாரதத்தில்
மகாத்மாவான உம்மை
வணங்கிப் போற்றிடுவோம்!
ஜெய்ஹிந்த்!
இனிய
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு
நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாற்றத்தை நோக்கி ஒரு சிந்தனை!
சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
வார்த்தைகள்.. எழுத்துகளின் கோர்வையால் உருவம் பெற்றாயே!
விரி பொழில் சூழ் குன்றையார்.. விறன்மிண்ட நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு
Bread Halwa .. வீட்டில் பிரெட் இருக்கா.. எடுத்துட்டு வாங்க.. ஸ்வீட்டா ஹல்வா பண்ணுவோம்!
{{comments.comment}}