அகிம்சை ஆடையை மேலணிந்து.. இம்சைத் தோலின் இடர்களைந்து.. எளிமையின் அழகே.. எங்கள் மகாத்மாவே!

Oct 02, 2024,10:28 AM IST





புத்திலிபாய் புதல்வனாய்

போர்பந்தரின் பொக்கிஷமாய்

பாரிசில் பட்டம் பெற்று

பாரதத்தைப் பாங்காய் அமைத்து 

வந்தே மாதரம் என முழங்கி

வந்த வெள்ளையனை விரட்டியடித்து 

கஸ்தூரி பாய் 

கரம் பிடித்து 

கஷ்டங்கள் யாவையும் 

களைந்தெடுத்து

அகிம்சை ஆடையை மேலணிந்து

இம்சைத் தோலின் இடர்களைந்து

எளிமையின் அழகாய் உருமாறி 

ஏழையின் அன்பில் கருவாகி 

எதிரியையும் நண்பனாய் நோக்கி 

அகிம்சையை மட்டுமே ஆயுதமாக்கி

சட்டையும் துறந்து 

சமத்துவம் கொண்டு 

நித்தமும் இந்தியன் என்ற

நிதர்சன கௌரவம் கொண்டு 

சத்தியமேவ ஜெயதே என்று

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து 

கதராடை உடுத்தி காட்சி தந்து 

கடைக்கோடி இந்தியனுக்கும்

மாட்சி தந்து 

எளிய வாழ்வு வாழ்ந்து 

ஏற்றம் கண்டு 

என்றென்றும் எங்கள் மனதில் வசிக்கும் மகாத்மாவே!

அகிலத்தில் உயர்ந்து 

தேசத்திற்குத் தந்தையாகிப்

பணத்தில் தலைபதித்து

பாரதத்தில்

மகாத்மாவான உம்மை 

வணங்கிப் போற்றிடுவோம்!

ஜெய்ஹிந்த்!

இனிய 

காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!


கவிதை: வி. ராஜேஸ்வரி

Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்