
புத்திலிபாய் புதல்வனாய்
போர்பந்தரின் பொக்கிஷமாய்
பாரிசில் பட்டம் பெற்று
பாரதத்தைப் பாங்காய் அமைத்து
வந்தே மாதரம் என முழங்கி
வந்த வெள்ளையனை விரட்டியடித்து
கஸ்தூரி பாய்
கரம் பிடித்து
கஷ்டங்கள் யாவையும்
களைந்தெடுத்து
அகிம்சை ஆடையை மேலணிந்து
இம்சைத் தோலின் இடர்களைந்து
எளிமையின் அழகாய் உருமாறி
ஏழையின் அன்பில் கருவாகி
எதிரியையும் நண்பனாய் நோக்கி
அகிம்சையை மட்டுமே ஆயுதமாக்கி
சட்டையும் துறந்து
சமத்துவம் கொண்டு
நித்தமும் இந்தியன் என்ற
நிதர்சன கௌரவம் கொண்டு
சத்தியமேவ ஜெயதே என்று
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து
கதராடை உடுத்தி காட்சி தந்து
கடைக்கோடி இந்தியனுக்கும்
மாட்சி தந்து
எளிய வாழ்வு வாழ்ந்து
ஏற்றம் கண்டு
என்றென்றும் எங்கள் மனதில் வசிக்கும் மகாத்மாவே!
அகிலத்தில் உயர்ந்து
தேசத்திற்குத் தந்தையாகிப்
பணத்தில் தலைபதித்து
பாரதத்தில்
மகாத்மாவான உம்மை
வணங்கிப் போற்றிடுவோம்!
ஜெய்ஹிந்த்!
இனிய
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}