டாக்டர் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை - அன்புமணி: உடனிருந்து பார்க்கிறேன் - ஜிகே மணி

Oct 06, 2025,06:27 PM IST

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐ சி யு வில் சிகிச்சை பெற்று வருவதால் பார்க்க முடியவில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி ராமதாசை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து, உடனிருந்து பார்த்து வருகிறேன் என்று புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


கடந்த சில காலமாகவே பாமக நிறுவனர் ராமதாஸிற்கும் அவரது மகன் அன்பு மணி ராமதாஸிற்கும் இடையே பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாமக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். மேலும், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்  ராமதாஸ். அதேபோல, அன்புமணியும், ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் பதிலடி கொடுத்து வந்தார்.




இந்த சூழலில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி நேரில் சென்று நலம் விசாரித்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில், நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்கள் நன்றாக உள்ளன. பயப்படும்படி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர். 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்  என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார் என்று தான் ராமதாசுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாமக கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்