சென்னை: கடந்த 5 வருடமாக கண்ணாடி உடையும் சம்பவங்கள் இல்லாமல் அமைதியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், நேற்று புதிய விமான முனையத்தின் நுழைவு வாசல் பகுதியில் இருந்த கண்ணாடிக் கதவு நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையம் என்றாலே,, கண்ணாடியெல்லாம் உடைஞ்சு உடைஞ்சு விழுமே அதானே என்று கிண்டல், கேலி செய்யும்ள அளவுக்கு ஒரு காலத்தில் மோசமான நிலை இருந்தது. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட முறை கண்ணாடிகள் உடைந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு கண்ணாடி உடையும். அப்படி இருந்தது நிலைமை. கடந்த ஐந்து வருடமாகத்தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்தும் வைத்தார். இதனால் விமான நிலையம் சர்வதேச அளவில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றது.
இந்த முனையத்தின் 14வது நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் அதிகாரிகள் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இங்கு நேற்று 7அடி உயர கண்ணாடி கதவின் ஒரு பகுதி விழுந்து நொறுங்கியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடைந்த கண்ணாடி அப்படியே இருந்தது, சிதறல்கள் கீழே விழவில்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பயங்கர சத்தத்துடன் கண்ணாடி நொறுங்கியதால் ஊழியர்கள், பணியாளர்கள் ,உணவு வழங்குவோர் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கண்ணாடி விழுந்து உடைந்தது பற்றி விசாரணை நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்த சம்பவம் நடந்திருப்பதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}