சென்னை: கடந்த 5 வருடமாக கண்ணாடி உடையும் சம்பவங்கள் இல்லாமல் அமைதியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், நேற்று புதிய விமான முனையத்தின் நுழைவு வாசல் பகுதியில் இருந்த கண்ணாடிக் கதவு நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையம் என்றாலே,, கண்ணாடியெல்லாம் உடைஞ்சு உடைஞ்சு விழுமே அதானே என்று கிண்டல், கேலி செய்யும்ள அளவுக்கு ஒரு காலத்தில் மோசமான நிலை இருந்தது. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட முறை கண்ணாடிகள் உடைந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு கண்ணாடி உடையும். அப்படி இருந்தது நிலைமை. கடந்த ஐந்து வருடமாகத்தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்தும் வைத்தார். இதனால் விமான நிலையம் சர்வதேச அளவில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றது.
இந்த முனையத்தின் 14வது நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் அதிகாரிகள் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இங்கு நேற்று 7அடி உயர கண்ணாடி கதவின் ஒரு பகுதி விழுந்து நொறுங்கியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடைந்த கண்ணாடி அப்படியே இருந்தது, சிதறல்கள் கீழே விழவில்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பயங்கர சத்தத்துடன் கண்ணாடி நொறுங்கியதால் ஊழியர்கள், பணியாளர்கள் ,உணவு வழங்குவோர் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கண்ணாடி விழுந்து உடைந்தது பற்றி விசாரணை நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்த சம்பவம் நடந்திருப்பதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நடுநிலயான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
{{comments.comment}}