சென்னை: கடந்த 5 வருடமாக கண்ணாடி உடையும் சம்பவங்கள் இல்லாமல் அமைதியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், நேற்று புதிய விமான முனையத்தின் நுழைவு வாசல் பகுதியில் இருந்த கண்ணாடிக் கதவு நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையம் என்றாலே,, கண்ணாடியெல்லாம் உடைஞ்சு உடைஞ்சு விழுமே அதானே என்று கிண்டல், கேலி செய்யும்ள அளவுக்கு ஒரு காலத்தில் மோசமான நிலை இருந்தது. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட முறை கண்ணாடிகள் உடைந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு கண்ணாடி உடையும். அப்படி இருந்தது நிலைமை. கடந்த ஐந்து வருடமாகத்தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்தும் வைத்தார். இதனால் விமான நிலையம் சர்வதேச அளவில் புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றது.
இந்த முனையத்தின் 14வது நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் அதிகாரிகள் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இங்கு நேற்று 7அடி உயர கண்ணாடி கதவின் ஒரு பகுதி விழுந்து நொறுங்கியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடைந்த கண்ணாடி அப்படியே இருந்தது, சிதறல்கள் கீழே விழவில்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பயங்கர சத்தத்துடன் கண்ணாடி நொறுங்கியதால் ஊழியர்கள், பணியாளர்கள் ,உணவு வழங்குவோர் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கண்ணாடி விழுந்து உடைந்தது பற்றி விசாரணை நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்த சம்பவம் நடந்திருப்பதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆசையில பாத்திகட்டி!
நிதானம்
வாழ்க்கை என்றால் என்ன.. அதை அழகாக வாழ்வது எப்படி?
JCD Prabhakar: சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஜேசிடி பிரபாகர்.. எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்!
கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
{{comments.comment}}