சென்னை: விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் சென்னை ரோஹினி திரையரங்கில் அதிகாரப்பூர்வமாக ரூ.390க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் முனுமுனுக்கின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற தி கோட் படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது மும்முரமாக ஏஜிஎஸ் நிறுவனம் செய்து வருகிறது. இப்படத்திற்கான டிக்கெட் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கியும், முன்பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்ட தினத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வெங்கட் பிரபு, அஜித் சார் ட்ரைலர் பார்த்துட்டு மெசேஜ் செய்தார். அதில் ட்ரைலர் நல்லா இருக்கு. விஜய்க்கும் டீம்க்கும் வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லிடு என்று கூறியிருந்தார். இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் படம் குறித்த எதிர் பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கவும் செய்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கொடுக்கும் ஒவ்வொரு போட்டியிலும் படம் குறித்து சுவாரஸ்யமாக கூறி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டுள்ளார்.
இந்நிலையில், தி கோட் படத்தின் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்துள்ளது. இப்படத்தின் டிக்கெட் விலை ரூ.390க்கு ரோகினி திரையரங்கமே அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்துள்ளது. இது ஜாஸ்தியா இருக்கே என்று பலரும் முனுமுனுக்கின்றனர். ஆனால் பிளாக்கில் இதை விட பயங்கரமாக விற்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}