சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.54 கிலோ தங்கம்.. கோவில் துணை கமிஷனர் சஸ்பெண்ட்!

Oct 08, 2025,05:06 PM IST

கொச்சி:  சபரிமலை ஐயப்பன் கோவிலில் 4.54 கிலோ தங்கம் காணாமல் போனதாக எழுந்த புகாரில், தேவஸ்தான துணை ஆணையர் பி. முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு சஸ்பெண்ட் செய்துள்ளது. 


இந்த சம்பவம் 2019 ஜூன் 17 அன்று நடந்தது. அப்போது முராரி பாபு சபரிமலையில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், கோவிலின் கருவறைக்கு இருபுறமும் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட துவாரபாலகர் சிலைகள் செப்புத் தகடுகளால் ஆனவை என்று தவறாகப் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடுமையான தவறு என்று தேவஸ்தான வாரியம் கூறியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெறும் வரை அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.




இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முராரி பாபு, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தனது அறிக்கை ஆரம்பகட்டமானது என்றும், நடைமுறைப்படி கோவில் தந்திரியிடம் ஆலோசனை பெற்ற பிறகே அதைத் தயாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த அறிக்கையில், செப்புத் தகடு என்று எழுதியிருந்தேன். ஏனென்றால் செப்பு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் அதை முலாம் பூச வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது என்றார் அவர்.


சபரிமலை தங்க காணாமல் போன வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம், பக்தர் உன்னிகிருஷ்ணன் பொட்டியின் ஸ்பான்சர்ஷிப்பில் கோவிலில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டபோது தங்கம் கணக்கில் வராமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் முராரி பாபுவின் சஸ்பெண்ட் நடவடிக்கை வந்துள்ளது.


இந்த விவகாரம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் புனிதமான சிலைகளில் இருந்து தங்கம் காணாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவஸ்தான போர்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்

news

நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்

news

திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?

news

பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு

news

ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்