புத்தகப் புழுக்களே.. கோலாகலமாக தொடங்கியது.. 47வது சென்னை புத்தகக் கண்காட்சி!

Jan 03, 2024,02:56 PM IST

சென்னை: சென்னையில்  47வது புத்தகக் கண்காட்சியை  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இந்த  கண்காட்சி இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் விடுமுறை நாட்களில் புத்தகக் கண்காட்சி தொடங்குவது வழக்கம். இதில் முதன்மையானது சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி. தமிழ்நாடு முழுவதும் இது கவனம் ஈர்க்கும் நிகழ்வாகும். இந்ததக் கண்காட்சியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


விழாவில் அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை, நந்தனம் ஓ எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று முதல் 21 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். 900 அரங்குகள் இம்முறை அமைக்கப்படவுள்ளன. கதைகள், நாவல்கள், இலக்கியம், அரசியல், வாழ்க்கை வரலாறு என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இங்கு இடம் பெற உள்ளன. இந்த முறை பென்குயின் போன்ற வெளிநாட்டு பதிப்பகங்களும் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளது.




எப்போது செயல்படும்:


இந்த புத்தகக் கண்காட்சி விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இதன் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


புத்தக விழாவில் ஏராளமான புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பேச்சரங்குகள் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

உங்களால் முடியவில்லை என்றால்...நெகடிவ் கமெண்ட் கொடுத்தவர்களை வச்சு செய்த த்ரிஷா

news

சூர்யா பேன்ஸ் கொண்டாட்டத்திற்கு ரெடியா? சூர்யா 46 டீம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

Trump Card: 50 லட்சம் டாலர் கொடுத்தால் கோல்ட் கார்டு.. அதிரடி திட்டத்தை இறக்கிய டிரம்ப்!

news

என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!

news

எங்களுக்கு மகன் பிறந்த பிறகுதான்.. பும்ரா பெரிய ஆளானார்.. மனைவி சஞ்சனா கணேசன் நெகிழ்ச்சி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

news

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்

news

முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்