புத்தகப் புழுக்களே.. கோலாகலமாக தொடங்கியது.. 47வது சென்னை புத்தகக் கண்காட்சி!

Jan 03, 2024,02:56 PM IST

சென்னை: சென்னையில்  47வது புத்தகக் கண்காட்சியை  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  இந்த  கண்காட்சி இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் விடுமுறை நாட்களில் புத்தகக் கண்காட்சி தொடங்குவது வழக்கம். இதில் முதன்மையானது சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி. தமிழ்நாடு முழுவதும் இது கவனம் ஈர்க்கும் நிகழ்வாகும். இந்ததக் கண்காட்சியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


விழாவில் அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை, நந்தனம் ஓ எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று முதல் 21 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். 900 அரங்குகள் இம்முறை அமைக்கப்படவுள்ளன. கதைகள், நாவல்கள், இலக்கியம், அரசியல், வாழ்க்கை வரலாறு என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இங்கு இடம் பெற உள்ளன. இந்த முறை பென்குயின் போன்ற வெளிநாட்டு பதிப்பகங்களும் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளது.




எப்போது செயல்படும்:


இந்த புத்தகக் கண்காட்சி விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இதன் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


புத்தக விழாவில் ஏராளமான புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பேச்சரங்குகள் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்