- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. பிறகு மிதிலி புயல் உருவானது. இதனால் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டியது.
தற்போது மீண்டும் குமரிக்கடல் பகுதியில் காற்றின் சுழற்சி உருவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலெடுக்க சுழற்சியும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் 22 ,23 ,24 ,ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் சிறப்பான மழை பெய்துள்ளது. நடப்பு வட கிழக்கு சீசனில் இதுதான் முதல் பெரிய மழையாகும்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இன்று மழை நிலவரம்:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை ,திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம்.
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்
எதிர்மறை எண்ணங்கள்.. எப்போதும் பிரகாசமான எதிர்காலத்தைத் தராது!
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
கரூருக்கு வரமாட்டீங்களா?...ஈரோட்டில் விஜய்க்கு எதிரான போஸ்டர்களால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
மார்கழி 03ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 03 வரிகள்
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் மார்கழி,15 சொர்க்க வாசல் திறப்பு
{{comments.comment}}