டெல்லி: இங்கிலாந்துக்கு விளையாடத்தான் வந்துள்ளோம். இந்த நேரத்தில் குடும்பத்தினரும் கூடவே இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியாக இருக்காது. குடும்பம் முக்கியம்தான். அதேசமயம், வந்துள்ள நோக்கம் அதை விட முக்கியமானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, ஒன்றை இழந்துள்ளது. தற்போது 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்பத்தினர் உடன் செல்வது தொடர்பாக பிசிசிஐ புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.
அதன்படி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால போட்டிகளில், குடும்பத்தினர் 14 நாட்கள் மட்டுமே வீரர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த பிசிசிஐ உத்தரவை முன்னாள் கேப்டன் விராட் கோலி கடுமையாக விமர்சித்திருந்தார். புதிய விதியை தான் விரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தற்போது கம்பீர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், குடும்பத்தினர் முக்கியம், ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். இது விடுமுறை அல்ல. நீங்கள் ஒரு மிகப்பெரிய நோக்கத்திற்காக இங்கு வந்துள்ளீர்கள். இந்த அணியில் அல்லது இந்த சுற்றுப்பயணத்தில் மிகக் குறைவான நபர்களே நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் இந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
குடும்பங்கள் எங்களுடன் வருவதை நான் எதிர்க்கவில்லை. குடும்பத்தினர் இருப்பது முக்கியம், ஆனால் உங்கள் கவனம் நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்கும், வேறு எந்த விஷயத்தையும் விட உங்களுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது என்பதற்கும், நீங்கள் அந்த இலக்கிற்கு, அந்த நோக்கத்திற்கு அர்ப்பணிப்புடன் இருந்தால், மற்ற அனைத்தும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார் கம்பீர்.
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்
மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!
இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!
{{comments.comment}}